June 6, 2026

Seithi Saral

Tamil News Channel

என்சிஇஆர்டி-ன் கீழ் தயாரிக்கப்படும் புத்தகங்களில் இனி “பாரத்”

1 min read

“Bharat” is no longer among the books produced under NCERT.

25/10/2023
என்சிஇஆர்டி-ன் கீழ் தயாரிக்கப்படும் புத்தகங்களில் இனி “பாரத்” என்ற பெயர்தான் இடம் பெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

பாடப்புத்தகங்கள்

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆர்டி) கீழ் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

அந்த வகையில், என்சிஇஆர்டி-ன் கீழ் தயாரிக்கப்படும் அனைத்து பாடப் புத்தகங்களிலும் இனி “இந்தியா” என்ற வார்த்தைக்கு பதிலாக “பாரத்” என்ற வார்த்தையே இடம் பெறும் என்று என்சிஇஆர்டி-ன் ஆலோசனை குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல், 12ம் வகுப்பு பாட புத்தகத்தில் இந்தியா என்ற பெயரை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக “பாரத்” என்ற பெயரை சேர்க்க என்சிஇஆர்டி ஒப்புதல் அளித்துள்ளது.

மேலும், பாட புத்தகங்களில் இந்து வெற்றி குறித்த விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *