May 20, 2024

Seithi Saral

Tamil News Channel

முல்லைப்பெரியாறு பார்க்கிங்: சர்வே ஆஃப் இந்தியாவுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

1 min read

Mullaperiyar Parking: Supreme Court orders Survey of India

28.11.2023
முல்லைப் பெரியாறு அணைப்பகுதியில் மிகப்பெரிய நான்கு சக்கர வாகன நிறுத்தம் அமைக்கும் பணியில் கடந்த 2013 ஆண்டு முதல் கேரள அரசு ஈடுபட்டு வருகிறது.
இதையடுத்து முல்லைப் பெரியாறு அணையின் நீர்த்தேக்கப் பகுதிகள் தமிழகத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டிருப்பதால், அதில் கட்டுமானப் பணிகள் நடைபெறும் பகுதியில் கட்டுமான பணிகள் மேற்கொள்ள அனுமதி இல்லை என்று தெரிவித்தும், கேரளா அரசின் முடிவை எதிர்த்தும் தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தது.
கடந்த மாதம் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, நில அளவை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்படும் மேற்பார்வை குழுவின் தலைமையில் கேரளா மற்றும் தமிழகத்தை உள்ளடக்கிய கூட்டு சர்வே நடத்த வேண்டும். இதுகுறித்து இரு மாநில அரசுகளும் பதிலளிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
மேலும் வழக்கின் விசாரணையை நவ.28ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.

அதன்படி சுப்ரீம் கோர்ட்டில் பார்க்கிங் விவகார வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, முல்லைப்பெரியாறு அணை பகுதியில் வாகன நிறுத்த மையம் அமைக்கும் விவகாரத்திற்கு தீர்வு காண கூட்டு சர்வே நடத்த உத்தரவிட்டார்.
3 மாதங்களில் அறிக்கை சமர்ப்பிக்கவும் சர்வே ஆஃப் இந்தியாவுக்கு உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து முல்லைப்பெரியாறு அணை பகுதியில் வாகன நிறுத்த மைய விவகாரத்துக்கு தீர்வு காண கூட்டு சர்வே நடத்த தமிழ்நாடு-கேரள மாநில அரசுகள் இசைவு அளித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.