July 20, 2026

Seithi Saral

Tamil News Channel

இந்தோனேசியாவில் எரிமலை வெடித்ததில் 23 பேர் சாவு

1 min read

23 killed in Indonesia volcano eruption

6.12.2023
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் உள்ள மவுண்ட் மராபி என்ற எரிமலை திடீரென வெடித்து சிதறியது. இதனால் அங்கு மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த வீரர்கள் அவசரமாக திரும்பினர். மொத்தம் 75 மலையேற்ற வீரர்கள் அங்கு சென்றிருந்திருந்தனர்.

அவர்களில் 46 பேர் கீழே இறங்கி வந்துவிட்டனர். மற்றவர்களை மீட்கும் முயற்சியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டனர். இதில் 11 பேர் பிணமாக மீட்கப்பட்டனர். 3 பேர் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டனர். மீதமுள்ள 12 பேரை மீட்புக்குழுவினர் தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் 12 பேரும் பலியானது தெரியவந்தது. அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதனால் பலி எண்ணிக்கை 23-ஆக உயர்ந்தது. மவுண்ட் மராபி எரிமலை காற்றில் 800 மீட்டர் உயரத்திற்கு அதிக வெப்பமான சாம்பலை கக்கி வருகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *