புஸ்சி ஆனந்த் மீது வழக்கு தொடர்ந்த ஞானசவுந்தரி கட்சியில் இருந்து நீக்கம்
1 min read
Gnanasoundari, who filed a case against Pucchi Anand, expelled from the party.
19.7.2026
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான வழக்கறிஞர் ஞானசௌந்தரி,
அரசு வழக்கறிஞர் நியமனத்தில் அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் மீது உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தவெக ஞானசவுந்தரி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
கட்சித் தலைமையின் வழிகாட்டுதலின்படி இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விழுப்புரம் தெற்கு மாவட்ட தவெக செயலாளர் மோகன்ராஜ் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வஅறிக்கையில்
கூறியிருப்பதாவது :-
வழக்கறிஞர் ஞான சௌந்தரி , தவெக கட்சியின் எதிரிகளுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு, கட்சிக்கு எதிராகப் பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறி வந்ததாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கட்சியின் விதிமுறைகளை மீறிச் செயல்பட்ட காரணத்தினாலேயே அவர் தவெக-வின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் உடனடியாக நீக்கப்படுகிறார் என மாவட்டச் செயலாளர் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
இந்த நீக்கத்தைத் தொடர்ந்து, கட்சியின் தொண்டர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் மாவட்டச் செயலாளர் மோகன்ராஜ் முக்கிய அறிவுறுத்தல் ஒன்றை வழங்கியுள்ளார்.
அதன்படி, இனிவரும் காலங்களில் கட்சி நிர்வாகத்தின் சார்பிலோ அல்லது தனிப்பட்ட முறையிலோ தவெக தோழர்கள் யாரும் ஞானசௌந்தரியுடன் எந்தவிதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என்று அந்த அறிக்கையில் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் கட்டுப்பாட்டை நிலைநிறுத்தும் நோக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
முன்னதாக, தவெக-விலிருந்து நீக்கப்பட்டுள்ள ஞானசவுந்தரி, தமிழக அமைச்சர் ஆனந்த் மீது மாவட்ட அரசு நீதிமன்றங்களில் வழக்கறிஞர்கள் நியமனம் செய்யப்பட்டதில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில், அவர் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாகி தவெக-விலிருந்து நீக்கப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
.
.