சங்கரன்கோவில் அருகே தாயை உயிரோடு எரித்துக் கொன்ற மகன் கைது
1 min readSon arrested for burning mother alive near Sankarankoil
24.12.2023
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே மது குடிக்க பணம் தராததால் தாயை உயிரோடு எரித்துக் கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி மாவட்டம் சங்க ரன்கோவில் அருகே உள்ள மணலூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆனைமுத்து. இவருடைய மனைவி ராமலட்சுமி (வயது 60) இவர்களது மகன் சங்கர நாராயணன் (வயது 42). இவர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
கணவன்- மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, சங்கர நாராயணனை விட்டு அவரது மனைவி பிரிந்து சென்று விட்டார். அவர்களுடைய இரண்டு குழந்தைகளும் விடுதியில் தங்கி இருந்து படித்து வருகின்றனர்
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆனைமுத்து இறந்து விட்டார். இதனால் ராமலட் சுமி மணலூரில் தனியாக வசித்து வந்துள்ளார். 100 நாள் வேலைக்கு சென்றும் முதியோர் உதவித்தொ கையை சேமித்தும் வைத்திருத்தார்.
சங்கர நாராயணன் அவ்வப்போது சொந்த ஊருக்கு சென்று தாயாரிடம் மதுகுடிக்க பணம் தருமாறு கேட்டு தகராறு செய்துள்ளார். நேற்று முன்தினம் மாலையில் சொந்த ஊருக்கு சென்ற சங்கர நாராயணன மதுகுடிக்கபணம் தருமாறு கேட்டு தாயார் ராமலட்சுமியிடம் தகராறு செய்துள்ளார். ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்து விட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த சங்கரநாராயணன் பெற்ற தாய் என்றும் பாராமல் ராமலட்சுமி மீது மண்ணெண் ணெயை ஊற்றி தீ வைத்ததாக கூறப்படுகிறது.
இதில் அவரது உடல் முழுவதும் தீப்பிடித்து உடல் எரிந்ததால் அவறி துடித்த வாறு வெளியே ஓடி வந்தார். உடல் கருகிய ராமலட்சுமி சம்பவ இடத்திலேயே பரி தாபமாக இறந்தார். சங்கரநாராயணன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் கரிவலம்வந்தநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த போலீசார் ராமலட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக் குப்பதிவு செய்த போலீசார் சங்கரநா ராயணனை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.