May 5, 2024

Seithi Saral

Tamil News Channel

செங்கோட்டை: 100 மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் ஆசிரியர்

1 min read

Red Fort: Teacher serving breakfast to 100 students

5.1.2024
தென்காசி மாவட்டம் செங்கோட்டை எஸ் எம் எஸ் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளில் படிக்கும் ஏழை எளிய மாணவர்களுக்கு தனது சொந்த செலவில் காலை உணவு வழங்கும் ஆசிரியர்களுக்கு பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

தென்காசி மாவட்டம் செங்கோட்டை எஸ் எம் எஸ் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளில் சுமார் 950 மாணவர்கள் படித்து வருகிறார்கள். இவர்களில் சிலர் காலையில் உணவு சாப்பிடாமல் வருவதை அறிந்த ஆசிரியர்கள் தலைமை ஆசிரியரிடம் இந்த தகவலை தெரிவித்து இவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று முடிவு எடுத்தார்கள் .தேவையான மாணவர்களுக்கு காலை உணவு வழங்குவது என்றும் இதற்கான செலவுகளை ஒரு ஆசிரியர் ஏற்றுக்கொள்வது என்றும் தீர்மானித்தார்கள் .
இதன் படி கடந்த ஒன்றரை மாதங்களாக தொடர்ந்து இந்த பணி நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில்
சுமார் 100 மாணவர்கள் பயன்பெற்று வருகிறார்கள்.

உணவுக்காக காலதாமத மாக மாணவர்கள் வருவதை குறைப்பதற்கும் பசியோடு இல்லாமல் படிப்பில் கவனம் செலுத்துவதற்கும் மாணவர்களுக்கு உதவும் இந்த ஆசிரிய பெருமக்களை முன்னாள் மாணவர் சங்கத்தின் சார்பாக பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்துள்ளனர்..

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.