May 16, 2024

Seithi Saral

Tamil News Channel

தமிழக மீனவர்கள் 13 பேர் கைது

1 min read

13 Tamil Nadu fishermen arrested

13/1/2024
எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை அவ்வப்போது கைது செய்து வருவது தொடர்கதையாகி உள்ளது. மேலும் தமிழக மீனவர்களின் படகுகளையும் அவர்கள் பறிமுதல் செய்துகொள்கின்றனர்.

இந்த நிலையில் எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த 13 மீனவர்களை 3 படகுகளுடன் இலங்கை கடற்படை கைது செய்தது.

இதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.