நாம்தமிழர்கட்சியின் தென்சென்னை வேட்பாளர் பேராசிரியர் தமிழ்செல்வி
1 min readSouth Chennai candidate of Namthamil Party is Professor Tamilselvi
13.1.2024
சென்னை அடுத்த வானகரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட்டது.
இதனையடுத்து, தென்சென்னை பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக பேராசிரியர் தமிழ்ச்செல்வி அறிவிக்கப்பட்டுள்ளார். விரைவில் 39 தொகுதி வேட்பாளர்களும் அறிவிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.
கூட்டத்தில் சீமான் பேசியதாவது:- மாவட்ட நிர்வாகிகள் நியமனத்தில் சிலர் புரிந்து கொள்ளவில்லை. முதல்கட்ட தலைவர்களே இல்லாதபோது இரண்டாம் கட்ட தலைவர் என்பதா? தலைவருக்கு என்ன தகுதி உள்ளது. கட்சி தொடங்குவது எளிது தொடர்வது என்பது கடினமானது என கூறினார்.