தென்காசியில் தேசிய தீ தொண்டு நாள் அனுசரிப்பு
1 min readNational Fire Charity Day is observed in Tenkasi
18.4.2024
தென்காசி மாவட்டம், தென்காசி தீயணைப்பு மீட்பு பணிகள் நிலையத்தில் தேசிய தீ தொண்டு நாள் அனுசரிக்கப்பட்டது
தீயணைப்பு மற்றும் மீட்பு பணியின் போது வீர மரணம் அடைந்த அலுவலர் மற்றும் பணியாளர்களின் உயிர் தியாகத்தை போற்றும் வகையில் நீத்தார் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் மாவட்ட தீயணைப்பு அலுவலர் இ.பானுப்ரியா உதவி மாவட்ட அலுவலர்கள் செ.சுரேஷ் ஆனந்த், ச.பிரதீப்குமார் ஆகியோர்கள் கலந்த கொண்டு நீத்தார் நினைவு ஸ்தூபியில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.
தென்காசி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் பணியாளர்கள் அணிவகுப்பு மரியாதையும் செலுத்தப்பட்டது. இறுதியாக தென்காசி சாந்தி மருத்துவ மனையில் மருத்துவர் மற்றும் செவிலியர்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு ஒத்திகை பயிற்சி நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு நிலை அலுவலர் கணேசன், ஜெயபிரகாஷ், பாபு ,மாதவன், ஜெகதீஷ், குமார், வேல்முருகன், ராஜ்குமார், விசுவநாதன், வெள்ளை பாண்டியன், சிவ சண்முகராஜ், கார்த்தி, ஆறுமுகம், ஹனிபா சுந்தர், மற்றும் மாவட்டத்தில் உள்ள கமாண்டோ படைவீர்கள் கலந்து கொண்டனர்.