லாரி மோதியதில் கார் டிரைவர் உட்பட 3 பேர் பரிதாப பலி
1 min read3 people, including the car driver, were tragically killed in a lorry collision
23.4.2024
உப்பூர் அருகே லாரி மோதியதில் கார் டிரைவர் உள்பட 3 பேர் பலியாகினர்.
நாகபட்டினம் மாவட்டம் பி.ஆர்.பட்டினத்தைச் சேர்ந்த சந்திரன் மகன் கார்த்திக், 20. இதே பகுதியைச் சேர்ந்தவர் மலைராஜன் 26, அக்கரைப்பேட்டை மல்லையா மகன் ராஜசேகர், 25. நாகூர்
சம்பா தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சிவலிங்கம் மகன்
சஞ்சீவ் காந்தி, 25. இந்த 4 பேரும் தூத்துக்குடி மாவட்டம் தருவை குளத்தில் படகு வாங்குவதற்காக ஏப்.22 இரவு காரில் கிளம்பினர்.
நேற்று அதிகாலை 2:30 மணியளவில், ராமநாதபுரம் மாவட்டம் உப்பூர் தென் குடியிருப்பு விலக்கு ரோடு அருகே கார் வந்து கொண்டிருந்தது. அப்போது தென்காசியில் இருந்து பட்டுக்கோட்டைக்கு செங்கல் ஏற்றிச்சென்ற லாரி கார் மீது மோதியது. இதில் கார் டிரைவர் கார்த்தி, காரின் முன் இருக்கையில் அமர்ந்திருந்த மலைராஜன் பலியாகினர். காரின் பின் இருக்கையில் பயணித்த இருவர் காயமடைந்தனர். மீட்கப்பட்ட இருவரும் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜசேகர் இறந்தார். விபத்திற்கான காரணம் குறித்து லாரி டிரைவர்
பட்டுக்கோட்டை அருகே
கீழப்பாளையத்தைச் சேர்ந்த அங்குராஜ் (39) என்பவரிடம் திருப்பாலைக்குடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.