May 3, 2024

Seithi Saral

Tamil News Channel

தலைமன்னார் – தனுஷ்கோடி இடையே நீந்த முயன்ற முதியவர் மாரடைப்பால் இறப்பு

1 min read

Elderly man dies of heart attack while trying to swim between Thalaimannar – Dhanushkodi

23.4.2024
இலங்கை தலைமன்னார் – தனுஷ்கோடி இடையேயான கடல் பரப்பை நீந்திக் கடக்க முயன்ற பெங்களூரு முதியவர் மாரடைப்பால் உயிரிழந்தார்.
கர்நாடக மாநிலம், பெங்களூருவைச் சேர்ந்த கோபால் ராவ் (78) உள்பட 31 பேர் தொடர் நீச்சல் மேற்கொள்ள
உரிய அனுமதியுடன் ராமேஸ்வரம் வந்தனர். ராமேஸ்வரம் சங்குமால் கடற்கரையில் இருந்து ஏப்.22 ல் படகு மூலம் தலைமன்னார் சென்றனர். நேற்று அதிகாலை 12:10 மணியளவில் தலைமன்னார் கடற்கரையில் இருந்து நீந்த துவங்கினர். இதில் மூன்றாவதாக நீந்திய கோபால்ராவ் (78) தொடர்ந்து நீந்த முடியாமல் அதிகாலை 3:10 மணியளவில் மயங்கிய நிலையில், படகில் ஏற்றப்பட்டார். அங்கு அவருடன் உடன் சென்ற டாக்டர் சோதனை செய்த போது கோபால் ராவ் மாரடைப்பால் உயிரிழந்தது தெரிந்தது. இதையடுத்து கோபால் ராவின் உடல் தனுஷ்கோடி கொண்டு வரப்பட்டு, ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் உடல்கூறாய்வு செய்யப்பட்டது. இது குறித்து ராமேஸ்வரம் நகர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.