விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்த நாட்டவர்கள் விவரம்
1 min read
Details of nationals who were on board the crashed plane
12.6.2025
ஆமதாபாத்தில் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்த பயணிகள் குறித்த முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
விபத்துக்குள்ளான போயிங் 787 – 8 விமானத்தில் 242 பயணிகள் இருந்தனர்.
அவர்களில் 169 பேர் இந்தியர்கள், 43 பேர் பிரிட்டனை சேர்ந்தவர்கள், ஒருவர் கனடாவைச் சேர்ந்தவர், 7 பேர் போர்ச்சுக்கல்லை சேர்ந்தவர்.
காயமடைந்தவர்களுக்கு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
பயணிகள் தேவைக்காக 1800 5691 444 என்ற உதவி எண் செயல்படுகிறது. விபத்து தொடர்பாக எந்த விசாரணைக்கும் முழு ஒத்துழைப்பை வழங்குவோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.