June 6, 2026

Seithi Saral

Tamil News Channel

ஜிஎஸ்டி சீர்திருத்தம் மக்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது – பிரதமர் மோடி பெருமிதம்

1 min read

GST reform has created enthusiasm among people – PM Modi proud

27.10.2025
பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை மனதின் குரல் நிகழ்ச்சி (மன் கி பாத்) மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். அந்த வகையில் 127-வது நிகழ்ச்சி இன்று ஒலிபரப்பானது. அதில் பிரதமர் மோடி பேசியதாவது:-

சமூகத்தின் ஒற்றுமையை சாத் பண்டிகை பிரதிபலிக்கிறது. ஆபரேஷன் சிந்தூர் ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை.

தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. நக்சலைட்டுகள் பயங்கரவாதத்தின் இருள் ஒரு காலத்தில் நிலவிய பகுதிகளில் கூட தற்போது தீபங்கள் ஏற்றப்பட்டன.மாவோயிஸ்ட்களை முற்றிலுமாக ஒழிக்க மக்கள் விரும்புகிறார்கள்.

ஒரு காலத்தில் பயத்தில் வாழ்ந்த மக்கள் தற்போது நக்சலைட்டுகள் செல்வாக்கை முற்றிலுமாக ஒழிக்க விரும்புகின்றனர். மக்கள் எங்கு வாழ்ந்தாலும் மரங்களை நட வேண்டும். அவை ஒவ்வொரு உயிரினங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். அன்னையின் பெயரில் ஒரு மரம் நடுவோம் இயக்கத்தில் இணைந்து நாம் அனைவரும் மரங்கள் நட வேண்டும்.

5 ஆண்டுகளுக்கு முன்பு, வனத்துறையினர் ஆமதாபாத் அருகே உள்ள தோலேராவில் சதுப்புநில மரங்களை நட தொடங்கினர். அங்குள்ள சுற்றுச்சூழல் அமைப்பில் டால்பின்கள், நண்டுகள் மற்றும் பிற நீர்வாழ் உயிரினங்களின் எண்ணிக்கை முன்பை விட தற்போது அதிகரித்துள்ளதாக வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புலம்பெயர்ந்த பறவைகளும் தற்போது இங்கு அதிக எண்ணிக்கையில் வருகின்றன. சுனாமி அல்லது சூறாவளி போன்ற பேரழிவுகள் ஏற்படும் போது இந்த சதுப்பு நிலங்கள் மிகவும் உதவியாக இருக்கும்.

ஜிஎஸ்டி சீர்திருத்தம் மக்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த முறை பண்டிகைகளின்போது சந்தைகளில் சுதேசி பொருட்களின் (உள்நாட்டு தயாரிப்பு) விற்பனை மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. சமையல் எண்ணெய்ப் பயன்பாட்டில் 10% குறைத்துக் கொள்ளுங்கள் என்று நான் உங்கள் அனைவரிடமும் வேண்டுகோள் விடுத்திருந்தேன். இது தொடர்பாக உங்கள் செயல்பாடுகளை பார்க்க முடிந்தது.

அக் 31ல் நாடு முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ள மாரத்தான் போட்டியில் அனைவரும் பங்கேற்க வேண்டும். இந்தியாவின் தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ இந்தியர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியை உருவாக்குகிறது. வந்தே மாதரம் என்ற கோஷம் 140 கோடி இந்தியர்களின் ஒற்றுமையை எடுத்துரைக்கிறது. ஒரு காலத்தில் சமஸ்கிருதம் மக்களின் தொடர்பு மொழியாக இருந்தது, தற்போது சமஸ்கிருதம் புறக்கணிக்கப்படுவது துரதிஷ்டம்.

நவம்பர் 7 ஆம் தேதி, ‘வந்தே மாதரம்’ கொண்டாட்டத்தின் 150வது ஆண்டில் நாம் நுழைகிறோம். ‘வந்தே மாதரம்’ 150 ஆண்டுகளுக்கு முன்பு இயற்றப்பட்டது, 1896 ஆம் ஆண்டில், குருதேவ் ரவீந்திரநாத் தாகூர் முதல் முறையாக அதைப் பாடினார். ‘வந்தே மாதரம்’ 19 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டிருக்கலாம், ஆனால் அதன் உணர்வு ஆயிரக்கணக்கான இந்தியர்களின் அழியாத நினைவுகளுடன் இணைக்கப்பட்டுள்ளது.

20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியை கற்பனை செய்து பாருங்கள் அந்த நேரத்தில், சுதந்திரம் கிடைக்கும் என்ற நம்பிக்கை எங்கும் இல்லை. இந்தியா முழுவதும் ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்து விட்டனர். அந்த சகாப்தத்தில், ஐதராபாத்தின் தேசபக்தி கொண்ட மக்களுக்கு அடக்குமுறை காலம் இன்னும் கொடூரமானது. அவர்கள் கொடூரமான மற்றும் இரக்கமற்ற நிஜாமின் அட்டூழியங்களையும் தாங்கிக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

ஏழைகள், தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடி சமூகங்களுக்கு எதிராக நடத்தப்பட்ட அட்டூழியங்களுக்கு எல்லையே இல்லை. அத்தகைய கடினமான காலங்களில், சுமார் 20 வயதுடைய ஒரு இளைஞன் இந்த அநீதிக்கு எதிராகக் குரல் கொடுத்தான். அடக்குமுறைக்கு எதிரான இந்தப் போராட்டத்தில், அந்த இளைஞன் நிஜாமின் அதிகாரி ஒருவரைக் கொன்றான். அவன் கைது நடவடிக்கையிலிருந்தும் வெற்றிகரமாகத் தப்பித்தான். நான் பேசுவது கோமரம் பீமைப் பற்றி. அவரது பிறந்தநாள் அக்டோபர் 22 ஆம் தேதி கொண்டாடப்பட்டது.

எண்ணற்ற மக்களின், குறிப்பாக பழங்குடி சமூகத்தின் இதயங்களில் அவர் ஒரு அழியாத முத்திரையைப் பதித்தார். அவரைப் பற்றி முடிந்தவரை கற்றுக்கொள்ள முயற்சிக்குமாறு இளைஞர்களை நான் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *