June 10, 2026

Seithi Saral

Tamil News Channel

‘பயங்கரவாத அமைப்புடன் எனது மகளுக்கு தொடர்பு இருப்பது தெரியாது’-பெண் டாக்டரின் தந்தை பேட்டி

1 min read

‘I didn’t know my daughter was connected to a terrorist organization’ – father of a female doctor

12.11.2025
பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்ததாக உத்தரபிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்த பெண் டாக்டர் ஷாஹீன் என்பவர் காஷ்மீரைச் சேர்ந்த போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரது காரில் இருந்து ஏ.கே. 47 ரக துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான பெண் டாக்டர் காஷ்மீர் அழைத்து செல்லப்பட்டார்.

டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து நாடு முழுவதும் சோதனையை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். இதன்படி லக்னோவில் உள்ள ஷாஹீன் வீட்டிலும் சோதனை நடந்தது. அங்கிருந்த ஆவணங்களை கைப்பற்றிய போலீசார், பெண் டாக்டரின் குடும்பத்தினரிடமும் விசாரித்தனர்.

அப்போது பெண் டாக்டரின் தந்தை செய்யது அகமது அன்சாரி கூறியதாவது:-
‘எனக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். எனது மூத்த மகன் ஷோயப் என்னுடன் இங்கே வசிக்கிறார். மகள் ஷாஹீன் சையத் கைது செய்யப்பட்டார். அவர் அலகாபாத்தில் மருத்துவம் பயின்றார். இன்று காலை அவரது வீடு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. எனது மகளுக்கும், பயங்கரவாத அமைப்புக்கும் தொடர்பு இருப்பது எனக்கு தெரியாது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனது இளைய மகன் பர்வேஸ் அன்சாரி நீண்ட காலமாக என்னுடன் இல்லை’
இவ்வாறு தெரிவித்தார்.

முன்னதாக பெண் டாக்டர் ஷாஹீன் இதுகுறித்து அரி​யானா போலீ​சார் கூறியதாவது:-
“ஆபரேஷன் சிந்​தூர் ராணுவ நடவடிக்​கை​யின்​போது பாகிஸ்​தானில் செயல்​பட்ட ஜெய்ஷ்-இ-முகமது தீவிர​வாத அமைப்​பின் முகாம்​கள் ஏவு​கணை தாக்​குதல் மூலம் தரைமட்​ட​மாக்​கப்​பட்​டன. இதில் ஏராள​மான தீவிர​வா​தி​கள் கொல்​லப்​பட்​டனர். அவர்​களின் மனை​வி​களை ஒன்​றிணைத்து கடந்த அக்​டோபரில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்​பில் மகளிர் பிரிவு தொடங்​கப்​பட்​டது.
இந்த அமைப்​புக்கு ஜமாத்-அல்-மோமினா என்று பெயரிடப்​பட்டு உள்​ளது. ஜெய்ஷ் அமைப்​பின் தலை​வர் மசூத் அசா​ரின் தங்கை சாதியா அசார், மகளிர் பிரி​வின் தலை​வ​ராக உள்​ளார். சாதி​யா​வின் கணவர் யூசுப் அசார், காந்​தஹார் விமான கடத்​தலின் மூளை​யாக செயல்​பட்​ட​வர் ஆவார். ஆபரேஷன் சிந்​தூர் ராணுவ நடவடிக்​கை​யின்​போது அவர் உயி​ரிழந்​தார். இதற்கு பழி​வாங்க சாதியா அசார், தீவிர​வாத மகளிர் பிரிவு தலை​வ​ராக பதவி​யேற்று இந்​திய பெண்​களை இணை​யதளம் வாயி​லாக மூளைச் சலவை செய்து வரு​கிறார். இதன் ஒரு பகு​தி​யாகவே ஜெய்ஷ்-இ-முகமது அமைப்​பின் இந்​திய மகளிர் பிரிவு தலை​வ​ராக மருத்​து​வர் ஷாஹீன் நியமிக்​கப்​பட்டு உள்​ளார். ஷாகினோடு தொடர்​பில் இருந்​தவர்​கள் யார் என்​பது குறித்து தீவிர வி​சா​ரணை நடத்​தப்​பட்டு வரு​கிறது”
இவ்வாறு அவர் தெரி​வித்தனர்​.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *