முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை
1 min read
Election Flying Squad raids former minister R.P. Udayakumar’s house
22.3.2026
முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை
ரூ.50ஆயிரத்திற்கு மேல் கொண்டு செல்வோரிடம் பறக்கும் படையினர் சோதனை செய்து வருகின்றனர். அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் டி.குன்னத்தூர் வீட்டில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பரிசுப்பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாகவும், தனது வீட்டில் அனுமதியின்றி கூட்டம் நடத்தி பணம் பட்டுவாடா செய்ததாகவும் புகார் எழுந்த நிலையில் தேர்தல் பறக்கும் படையினர் அவரது வீட்டில் சோதனை செய்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.