மதுரா யமுனை ஆற்றில் படகு கவிழ்ந்து 9 பேர் பலி
1 min read
9 dead as boat capsizes in Yamuna river in Mathura
11.6.2026
உத்தர பிரதேசத்தின் மதுராவில் உள்ள யமுனை ஆற்றில் படகு ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் 20க்கும் அதிகமானோர் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென படகு கவிழ்ந்து விழுந்தது.
இந்த விபத்தில் படகில் பயணம் செய்த 9 பேர் உயிரிழந்தனர் என முதல் கட்ட தகவல் வெளியானது.
தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக் குழுவினர் யமுனை ஆற்றில் விழுந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். பத்துக்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர். மற்றவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.
யமுனை ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த விபத்தில் காயமடைந்தவர்களுக்குத் தலா ரூ. 50,000 வழங்கப்படும் என்றும் பிரதமர் அறிவித்தார். உயிரிழப்புகள் ஏற்பட்டது குறித்து அவர் ஆழ்ந்த வேதனையையும் வெளிப்படுத்தினார். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி தனது இரங்கலை தெரிவித்தார்.
இது குறித்த எக்ஸ் தள பதிவில் பிரதமர் மோடி, “காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய நான் பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு உள்ளூர் நிர்வாகம் உதவி வருகிறது,” என்று குறிப்பிட்டுள்ளார்.
கருணை தொகையை அறிவிக்கும்போது, உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு PMNRF-லிருந்து தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்குத் தலா ரூ. 50,000-மும் வழங்கப்படும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.
முக்கியமாக பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளை ஏற்றி சென்ற ஒரு படகு, மதுராவில் உள்ள யமுனை நதியில் வெள்ளிக்கிழமை கவிழ்ந்தது. இதில் குறைந்தது 10 பேர் உயிரிழந்ததாகவும், பலர் காணாமல் போனதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இரண்டு டஜனுக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளை ஏற்றி சென்ற அந்த படகு, ஆழமான பகுதிக்குள் சென்றபோது நீரில் மிதந்து கொண்டிருந்த ஒரு மிதவைப் பாலத்தின் (pontoon) மீது மோதியதால், கேசி காட் (Kesi Ghat) அருகே இந்த விபத்து நிகழ்ந்ததாக அதிகாரிகள் கூறினர்.