கேரளத்தில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கிறது
1 min read
Congress came to power in Kerala.
4.5.2026
கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை முடிந்தது. ஆளும் இடதுசாரியை வெளியேற்றி காங்கிரஸ் கட்சி 63 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது.
140 தொகுதிகளை உடைய கேரளத்தில் ஆட்சி அமைக்க 71 இடங்கள் தேவை. தற்போது காங்கிரஸ் கட்சி 63 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
கேரளத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் இடது ஜனநாயக முன்னணியின் தோல்வியைத் தொடர்ந்து, கேரள முதலமைச்சர் பதவியில் இருந்த பினராயி விஜயன் இன்று (மே.4) ராஜிநாமா செய்தார்.
ஆளுநர் ஆா்.வி.ஆா்லேகா், பினராயி விஜயனின் ராஜிநாமாவை ஏற்றுக்கொண்டதோடு, மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் வரை விஜயனைப் பொறுப்பு முதல்வராகத் தொடருமாறு கேட்டுக்கொண்டதாக ராஜ்பவன் அறிக்கை தெரிவிக்கிறது.
கடந்த 10 ஆண்டுகளில் இரண்டு முறை தொடர்ச்சியாக மாநிலத்தில் ஆட்சி வகித்து வந்த விஜயன், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, வெற்றிப்பாதையில் உள்ளதைத் தொடர்ந்து தனது ராஜினாமா கடிதத்தைச் சமர்ப்பித்தார்.