June 11, 2026

Seithi Saral

Tamil News Channel

நெல்லையில் கஞ்சா விற்ற வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

1 min read

Youth arrested under the Gangster Act for selling ganja in Paddy

14.5.2026
திருநெல்வேலி சந்திப்பு பகுதியை சேர்ந்த அய்யாதுரை மகன் மாரிமுத்து (வயது 29) என்பவர் நெல்லை மாநகர பகுதியில் கஞ்சா போதை பொருள் விற்பனை செய்து எதிர்மறை கண்காணிப்பிற்கு வந்து, பொது ஒழுங்கு மற்றும் பொது சுகாதார பராமரிப்பிற்கு குந்தகம் விளைவித்து வந்த “மருந்து சரக்கு குற்றவாளி” ஆவார்.

அதைத் தொடர்ந்து திருநெல்வேலி சந்திப்பு காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டரின் பரிந்துரையின் பேரில் திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனரின் உத்தரவுப்படி மாரிமுத்து நேற்று குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *