கோவையில் கொல்லப்பட்ட சிறுமி குடும்பத்துக்கு விஜய் போனில் ஆறுதல்
1 min read
Vijay calls to console the family of the girl killed in Coimbatore
24.5.2026
கோவை சூலூர் அருகே கொலை செய்யப்பட்ட 10 வயது சிறுமியின் சடலம் நேற்று மாலை அவர்களது சொந்த ஊரான சேலம் மாவட்டம் கொளத்தூர் ஒன்றியம் உக்கம்பட்டி காடு கிராமத்தில் தகனம் செய்யப்பட்டது. இன்று சிறுமியின் வீட்டுக்கு சென்ற தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் சிறுமியின் தந்தைக்கு ஆறுதல் கூறி வீடு கட்ட நிலம் தருவதாக கூறினர்.
அதனைத் தொடர்ந்து சேலம் கலெக்டர் இளம்பகவத், போக்குவரத்து துறை அமைச்சர் பார்த்திபன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் ஆகியோர் சிறுமியின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினர். அதனை தொடர்ந்து தமிழக முதல்வர் விஜய் மொபைலில் சிறுமியின் தந்தையிடம் பேசினார். பின்பு தமிழக அரசு சார்பில் 7 லட்சம் ரூபாய் காசோலையை அமைச்சர், கலெக்டர் சிறுமியின் தந்தையிடம் வழங்கினர்.