July 17, 2026

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் பயணிகள் ரெயில்- பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

1 min read

India’s first hydrogen passenger train – Prime Minister Modi flags it off.

17.7.2026
நாட்டின் முதலாவது, உலகின் நீண்ட தூர ஹைட்ரஜன் எரிபொருள் ரெயில் சேவையை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பிரதமர் நரேந்திர மோடி இன்று அரியானா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தின் போது அவர் சுமார் ரூ.26 ஆயிரத்து 800 கோடி மதிப்பிலான பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களை தொடங்கி வைத்தார். மேலும் புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்.

இதில் முதல் நிகழ்ச்சியாக இந்தியாவின் முதலா​வது ஹைட்​ரஜன் பயணிகள் ரெயிலை பிரதமர் நரேந்​திர மோடி தொடங்கி வைத்தார்.

இந்​தி​யா​வில் ஹைட்​ரஜன் எரிபொருளில் இயங்​கும் ரெயில் என்​ஜினை தயாரிப்பதற்காக கடந்த 2021-ம் ஆண்டு முயற்​சிகள் தொடங்​கின. ரூ.136 கோடி மதிப்​பீட்​டில் வடக்கு மண்டல ரெயில்வே இந்த திட்​டத்தை கடந்த 2022-ம் ஆண்டு ஏப்​ரல் மாதம் தொடங்கியது. இந்த திட்​டத்​துக்​கான டெண்​டர் ஐத​ரா​பாத்​தை சேர்ந்த மேதா நிறுவனத்துக்கு வழங்​கப்​பட்​டது. இந்த ​நிறு​வனம் ​தான் எரிபொருட்​களை சப்ளை செய்​கிறது.

ஹைட்​ரஜன் ரெயிலை வடிவ​மைக்​கும் பணி​கள் சென்னை பெரம்​பூரில் உள்ள ஐ.சி.எப். தொழிற்​சாலை​யில் நடைபெற்றது. ரெயில் வடிவமைப்பு பணி​கள் முடிவடைந்ததை தொடர்ந்து சோதனை ஓட்​டங்​களும் நடை​பெற்​றன. இதையடுத்​து, ஹைட்ரஜன் பயணிகள் ரெயிலை அறி​முகப்படுத்த கடந்த மே 22-ந்தேதி ரெயில்வே வாரி​யம் ஒப்​புதல் அளித்தது.

இந்த நிலையில் அரியானா மாநிலம் ஜிந்த் ரெயில் நிலையத்தில் இன்று காலை நடைபெற்ற விழாவில் இந்தியாவின் முதலாவது ஹைட்​ரஜன் ரெயிலை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதன் மூலம் தூய எரிசக்திக்கு மாறும் இந்தியாவின் லட்சிய பயணம் மற்றும் நிலையான – பசுமையான ரெயில் போக்குவரத்துக்கான புதிய அத்தியாயம் தொடங்கியது.

ஜெர்​மனி​யில் முதன்​முதலாக உலகின் முதல் ஹைட்​ரஜன் பயணி​கள் ரெயில் கடந்த 2018-ம் ஆண்​டு இயக்​கப்​பட்​டது. பின்னர் ஜப்பான், சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகள் தங்​கள் நாடு​களில் தயாரிக்​கப்பட்ட ஹைட்ரஜன் ரெயிலை இயக்​கின. தமிழகத்துக்கு பெருமை சேர்க்​கும் வித​மாக, இந்த வரலாற்​று சிறப்​புமிக்க முதல் ஹைட்​ரஜன் ரெயில், சென்னை பெரம்​பூரில் உள்ள ஐ.சி.எப். தொழிற்​சாலை​யில் முழு​மை​யாக வடிவமைக்​கப்​பட்டு தயாரிக்கப்பட்டு உள்ளது.

இந்த ரெயில் சுற்​றுச்​சூழலுக்கு கேடு விளைவிக்​காத வகையில் ஹைட்ரஜன் எரிபொருள் தொழில்நுட்பம், பூஜ்ஜிய கார்பன் உமிழ்வை கொண்டது. இதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதுடன், புதைபடிவ எரிபொருட்களின் இறக்குமதியும் குறையும்.

பன்முக பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய இந்த ரெயில் அரியானா மாநிலத்தில் மின்​மய​மாக்​கப்​ப​டாத 89 கி.மீ. நீள​முள்ள ஜிந்த் – சோனிபட் வழித்​தடத்​தில் உள்ள 12 ரெயில் நிலை​யங்​களை இணைக்கும் வகை​யில் இயக்​கப்​படுகிறது. இந்த ரெயில், உலகின் மிக நீளமான, அதிக திறன் கொண்ட ஹைட்ரஜன் ரெயில் திட்டங்களில் ஒன்றாகும்.

இந்த ரெயில் தின​மும் 2 முறை இரு​மார்க்​கங்​களி​லும் இயக்​கப்படும். ஏழை, நடுத்தர மக்​கள் பயன்​பெறும் வகை​யில் இதன் பயண கட்​ட​ணம் மிக குறை​வாக ரூ.5 முதல் அதி​கபட்​ச​மாக ரூ.25 வரை நிர்​ண​யம் செய்யப்​பட்​டுள்​ளது.

இந்தியாவில் தற்போது 99 சதவீதத்துக்கும் மேற்பட்ட அகல ரெயில் பாதை வழித்தடங்கள் மின்மயமாக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில் மாசில்லா ரெயில் இயக்கத்துக்கான அடுத்த கட்ட பாய்ச்சலை இந்திய ரெயில்வே முன்னெடுத்து உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *