பெண்கள் தங்கும் விடுதியில் தீ விபத்து: 3 பெண்கள் சாவு
1 min read
Fire at women’s hostel: 3 women die
22/2/2020
சண்டிகரில் பெண்கள் தங்கும் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பெண்கள் உடல் கருதி பரிதாபமாக இறந்தனர்.
தீவிபத்து
பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் செக்டார் 32-ம் பகுதியில் பெண்கள் தங்கும் விடுதி உள்ளது. பணம் கட்டி இதில் பல இளம்பெண்கள் தங்கி இருக்கிறார்கள்.
இந்த விடுதியின் முதல் தளத்தில் 19 முதல் 22 வயது வரையிலான பெண்கள் தங்கியுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று (சனிக்கிழமை) மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில், 2 கல்லூரி மாணவிகள் உட்பட 3 இளம்பெண்கள் உயிருடன் எரிந்து பலியாகினர். பலர் காயமடைந்துள்ளனர்.
தகவல் கிடைத்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை போராடி அணைத்தனர். மேலும் மீட்பு பணியில் ஈடுபட்படனர். அவர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அவர்களில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளனர்.