ஐஐடி விடுதி அறைக்குள் இரவு முழுவதும் தனிமையில் இருந்த மாணவன், மாணவி
1 min read24.2.2020
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம், நூஜிவீடு நகரில் அரசு ஐஐடி உள்ளது. இங்கு சுமார் 6 ஆயிரம் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் பூட்டப்பட்ட ஐஐடி மாணவியர் விடுதியில் உள்ள ஒரு அறையில் மாணவன் ஒருவன் நேற்று முன்தினம் மாலை முதல் பதுங்கியிருப்பதாக 23 ம் தேதி காலை பேராசிரியர்களுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து பேராசிரியர்கள் ஐஐடி பாதுகாவலர்களுடன் காலை அங்கு சென்று பார்த்தனர். அப்போது அந்த விடுதி அறை பூட்டு போடப்பட்டிருந்தது. இருப்பினும் சந்தேகமடைந்த பாதுகாவலர்கள் அறையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது அங்கு பி.டெக் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி இருந்தது தெரியவந்தது. இருப்பினும் அந்த அறை முழுவதும் சோதனை செய்தபோது அங்கு கட்டிலுக்கு அடியில் மாணவன் ஒருவன் பதுங்கியிருந்ததும் தெரியவந்தது. வெளியே பூட்டு உடைக்கும் சத்தம் கேட்டு அவர் கட்டிலுக்கு அடியில் பதுங்கியுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பேராசிரியர்கள் சம்பந்தப்பட்ட மாணவன் மற்றும் மாணவியின் பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர். இதுகுறித்து இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் இருவரும் இந்த அறைக்குள் வந்தது எப்படி? வெளியே பூட்டிச்சென்றது யார்? இருவரும் காதலித்து வந்தார்களா? என விசாரணை நடந்து வருகிறது.