April 29, 2024

Seithi Saral

Tamil News Channel

பள்ளி மாணவி கூட்டு பலாத்காரம்- பிளஸ்1 மாணவன் கைது

1 min read
Girl Student Collective Rape – Plus-1 boy arrested

25.2.2020

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அருகே பள்ளி மாணவிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து நண்பர்களுடன் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாக பள்ளி மாணவன் கைது செய்யப்பட்டுள்ளான்.

வேப்பனஹள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11வது படிக்கும் அந்த மாணவன் பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11வது படித்து வரும் மாணவியை நட்பாகப் பேசி தனியே அழைத்துச் சென்றுள்ளான்.

அங்கு வந்த அந்த மாணவனின் நண்பர்கள் இருவர் மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தைக் கொடுத்து, 3 பேருமாகச் சேர்ந்து மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தனர்.

மயக்கம் தெளிந்து மாணவி பெற்றோர் மூலம் கொடுத்த புகாரின் பேரில் 11ம் வகுப்பு மாணவனை கைது செய்தனர். அவனது நண்பர்கள் இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.