May 18, 2024

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் 3பேருக்கு கொரோனா தாக்குதல்

1 min read
Corona attacks 3 people in India

2.3.2020

இந்தியாவில் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், ராஜஸ்தானை சேர்ந்த மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

சீனாவின் ஹுபே மாநிலத்தின் வூகான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா, உலகின் பல்வேறு நாடுகளிலும் பரவி வருகிறது. கொரோனாவால் இதுவரை 3,000 பேருக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். 88,000 க்கும் அதிகமானோர் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.

இந்நிலையில், இத்தாலியில் இருந்து டில்லி வந்த ஒருவருக்கும், துபாயில் இருந்து வந்த தெலுங்கானாவை சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், இத்தாலியிலிருந்து ஜெய்பூர் வந்த நபருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதிக்கப்பட்ட நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளார்கள் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.