May 19, 2024

Seithi Saral

Tamil News Channel

கொரானோவால் பாதிக்கப்பட்டவரின் செல்போனை பயன்படுத்திய 3 பேர் தனிமைப்படுத்தி கண்காணிப்பு

1 min read
Isolation and surveillance of 3 people using the cell phone of the victim by Corono

28.3.2020

அரியலூர் அரசு மருத்துவமனையில் 25 வயது மதிக்கதக்க பெண் ஒருவர் கடந்த 20-ம்தேதி காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டவரின் ரத்தமாதிரிகளை பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.

இந்நிலையில் அப்பெண் கொரோனா வார்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தபோது அவரது செல்போனில் டிக்டாக் செய்து பதிவிட்டுள்ளார். அப்போது இம்மருத்துவமனையில் பணியாற்றிய மருத்துவ ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் 2 பெண்கள் உள்ளிட்ட 3 பேர் கொரோனா பாதிக்கப்பட்டவரின் செல்போனை வாங்கி பயன்படுத்தியுள்ளனர்.

27ம் தேதி மதியம் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து, இந்த டிக்டாக் வீடியோ மற்றும் அவரது செல்போனை வாங்கி மருத்துவ தூய்மை பணியாளர்கள் 2 பெண்கள் ஒரு ஆண் என 3பேர் பயன்படுத்தியதை மருத்துவ அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

இதனையடுத்து மருத்துவ தூய்மை பணியாளர்கள் 3 பேரையும் பணிநீக்கம் செய்துள்ள அதிகாரிகள், அந்த 3 பேரையும் கொரோனா வார்டில் தனிமைப்படுத்தியுள்ளனர். அவர்கள் கொரோனா பாதிக்கப்பட்ட பெண்ணின் செல்போனை வாங்கி பயன்படுத்தியதால் இவர்களுக்கு கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளதால் 14 நாட்கள் இவர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.