கொரோனா இதுவரை சமூக தொற்றாக மாறவில்லை : மத்திய நல்வாழ்வுத் துறை தகவல்
1 min readCorona has not yet become a social epidemic: Inform by Central Welfare Department
31/3/2020
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவுவது இதுவரை சமூக தொற்றாக மாறவில்லை என்று மத்திய நல்வாழ்வுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொரோனா
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவியதைத் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,100 ஆக உள்ளது. கொரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவது.
இந்த நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் என்பது உள்வட்டப் பரவலாகவே இருப்பதாகவும் சமூக தொற்றாக மாறவில்லை என்றும் மத்திய நல்வாழ்வுத் துறை தகவல்கூறியுள்ளது.
பொதுமக்கள் அனைவருமே சமூக இடைவெளியை நிச்சயம் பின்பற்ற வேண்டும் என்றும் ஒருவர் அஜாக்கிரதையாக இருந்தால் கூட, கொரோனா வைரஸ் இந்தியாவில் பெருந்தொற்றாக மாறிவிடும் என்றும் எச்சரித்து உள்ளது. தொழில்நுட்ப ரீதியாகக் கூறுவது என்றால், இந்தியாவில் இதுவரை கொரோனா உள்வட்டப் பரவல் என்னும் நிலையில் உள்ளது. அதிர்ஷ்டவசமாக இது சமூக தொற்றாக மாறவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
கிருமி நாசினி
பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த பொதுமக்கள் மீது உத்தரப்பிரதேசத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது குறித்து விளக்கம் மத்திய சுகாதாரத்துறை விளக்கம் அளித்திருக்க்கிறது. சில ஊழியர்கள், தூய்மைப்படுத்தும் பணியை சரியாக புரியாமல் மிகத் தவறாகக் கையாண்டு உள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று விளக்கப்பட்டு உள்ளது.
தொழிலாளர்கள்
வெளிமாநிலங்களில் இருந்து வந்து தங்கி வேலை செய்து வந்த தொழிலாளர்களின் உணவு, தங்குமிட வசதிகளை உறுதி செய்யுமாறு மாநில மற்றும் யூனியன்பிரதேச அரசுகளுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.