May 8, 2024

Seithi Saral

Tamil News Channel

கொரோனா பரவலால் வேதனை; ஜெர்மன் மந்திரி ரெயிலில் பாய்ந்து தற்கொலை

1 min read
Seithi Saral featured Image
Torment by corona spread; German minister commits suicide by train

31/3/2020
கொரோன பரவலால் தனது மாநிலத்தில் நிதிநிலைமை மோசம் அடைந்துவிட்ட வேதனையில் ஜெர்மன் நாட்டில் உள்ள ஹெஸ்சி மாநில நிதி மந்திரி ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

கொரோனா பரவல்

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் அந்த நாட்டில் ஆயிரக்கணக்கானோரை கொன்று குவித்தது. அது பிற நாடுகளுக்கும் பரவி அங்குள்ளோ ஏராளமான மக்களை கொன்று குவித்து வருகிறது. சீனாவைவிட இத்தாலியில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை அதிகமாகவிட்டது. அமெரிக்காவிலும் அந்த வைரஸ் அதிகமானோவரை தாக்கியுள்ளது. சில நாடடு அதிபர்களையும் அது விட்டு வைக்கவில்லை.
இந்த கொரோனாவால் அனைத்து நாடுகளின் பொருளாதாரமும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜெர்மன் நாட்டிலும் கொரோனாவால் பலர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் அந்த நாட்டின் பொருளாதாரமும் பெரிய சரிவை சந்தித்து உள்ளது.

தற்கொலை

ஜெர்மன் நாட்டில் உள்ள ஹெஸ்சி மாநிலத்தில் பொருளாதரம் பெரும் வீழ்ச்சி அடைந்து உள்ளது. இதனால் வேதனை அடைந்த அந்த மாநில நிதி மந்திரி ரெயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.அவரது பெயர் தாமஸ் ஸ்காபர். 54 வயதான. அவர்.

பிராங்பர்ட் மற்றும் மெயின்ஸ் நகரங்களுக்கு இடையே அவர் ரெயில் பாய்ந்து தற்கொலை செய்துள்ளார். நேற்று(திங்கட்கிழமை) அவரது உடல் தண்டவாளத்தில் கிடந்து உள்ளது. முதல் அதை பாராமெடிக்கல் துறையைச் சேர்ந்தவர்கள் பார்த்து போலீசுக்கு தகவல் தெரிவி்த்தனர். போலீசார் விரைந்து வந்து ரத்தக் காயங்களுடன் கிடந்த உடலை மீட்டனர். முதலில் அது மந்திரியின் உடல் என்று போலீசார் நினைக்கவில்லை. பின்னர் நடத்திய ஆய்வில்தான் அது மந்திரி தாமஸ் என தெரியந்தது.
அவர் தற்கொலை செய்யும் முன் எழுதிய கடிதம் தொடர்பாக பிராங்பர்டர் ஆல்ஜெமினி ஜீடங் என்ற தினசரி பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அதில், கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக மாநிலத்தின் நிதிச்சுமை நிதிச்சூழல், நிதிநிலை, தொழில் ஆகியவை குறித்து மக்களுக்கு அறிவி்த்து வந்த தாமஸ் கடந்த சில நாட்களாக எந்தவிதமான அறிவிப்பும் வெளியிடவில்லை.
ஆனால், தனக்கு நெருக்கமானவர்களிடம் கொரோனா வைரசால் மாநிலத்தின் நிதிநிலைமை மோசமடைந்துவிட்டது என்று வருத்தப்பட்டுள்ளார். இதனால் மனவேதனையடைந்து தாமஸ் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை சய்திருப்பார் என்று அந்த பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.