டெல்லி ஜமாத் மாநாட்டில் பங்கேற்ற விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 13 பேருக்கு கொரோனா பரிசோதனை
1 min read13 people take for corona test from Virudhunagar district whose participated in Delhi Jamaat conference
31/3/2020
டெல்லி ஜமாத் மாநாட்டில் பங்கேற்ற 13 பேருக்கு முதல்கட்டகொரோனா பரிசோதனை செய்ய ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஜமாத் மாநாடு
இந்தியாவில் கொரோனா பாதிப்பின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
டெல்லி நிஜாமுதீனில் மார்ச் முதல் வாரம் ஜமாத் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் பங்கேற்றவர்களில், தமிழகத்தை சேர்ந்த சிலருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதாக சுகாதார துறை ஏற்கெனவே அறிவித்து இருந்தது.
இந்த மாநாட்டில் 1500 பேர் கலந்து கொண்டனர்.
இவர்களில் 981 பேரின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
விருதுநகர்
இந்த நிலையில் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும், அந்த மாநாட்டில் கலந்து கொண்டது தெரியவந்துள்ளது. அவர்களை காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர்.
இதனையடுத்து விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், திருச்சுழி, அருப்புக்கோட்டை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் 13 பேர் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் முதல் கட்ட பரிசோதனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு கொரோனா தொற்று இருக்கலாமா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பரிசோதனை நடைபெற்று வருகிறது.
இதைத்தொடர்ந்து அனைவரும் தனிமைப்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.