April 19, 2024

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் ஒரே நாளில் 57 பேருக்கு கொரோனா உறுதி; மேலப்பாளையம் தனிமைப் படுத்தப்பட்டது

1 min read
Seithi Saral featured Image
Corona conforms 57 persons in one day in Tamilnadu. Melapalayam was isolated

1-4-2020

கொரோனா பாதிப்பில் இந்தியாவிலேயே தமிழகம் மூன்றாவது இடத்துக்கு வந்துள்ளது. ஒரே நாளில் 57 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. நெல்லை மேலப்பாளையம் தனிமைப்படுத்தப்பட்டது.

இந்தியாவில் கொரோனாஉலகையே பெரும்பாதிப்புக்குள்ளாக்கி வரும் கொரோனா முதன் முதலில் சீனாவில் உகான் மாகாணத்தில் உருவானது.

இதுவரை இந்தியாவில் 1397 பேர் இந்த வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை 35 பேர் இறந்துள்ளனர்.

3-வது இடம்

ஆரம்பத்தில் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. இந்த நிலையில்

கொரோனா பாதிப்புள்ள மாநிலங்களில் நாட்டிலேயே தமிழகம் நேற்று (செவ்வாய்க்கிழமை)
மூன்றாவது இடத்திற்கு வந்துவிட்டது.கொரோனாவால் அதிகபட்சமாக கேரளாவில் 234 பேரும், மராட்டிய மாநிலத்தில் 216 பேரும், தமிழகத்தில் 124 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மட்டும் 57 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகாரி பேட்டி

முன்னதாக தமிழக சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

சென்னையில் மேலும் 50 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.(பின்னர் 57 ஆக உயர்ந்தது) இதில் 45 பேர் டெல்லி மாநாட்டுக்குச் சென்று திரும்பியவர்கள். தமிழகத்தில் இருந்து 1,500 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். இதில், 1,131 பேர் தமிழகம் திரும்பியுள்ளனர். மற்றவர்கள் அங்கேயே இருந்துள்ளனர். இந்த 1,131 பேரில் 515 பேர் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளனர். இவர்களுக்கு நடத்தப்பட்ட சோதனையில் 45 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மீதமுள்ளவர்களைக் கண்டறியும் பணி நடைபெற்று வருகிறது. அவர்களைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர்களே தாமாக முன்வந்து மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். பாதித்தவர்கள் அனைவரது உடல்நிலையும் சீராகவே உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

இஸ்லாமிய மாநாடு

டெல்லி நிஜாமுதினில் நடந்த தவுஹித் ஜமாத் என்ற இஸ்லாமிய மாநாட்டில் வெளிநாட்டில் இருந்து பலர் கலந்து கொண்டனர். இவர் மூலம்தான் பலருக்கு கொரோனா வைரஸ் பரவி உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 124 ஆக உயர்ந்துள்ளது.

மேலப்பாளையம்

நெல்லையில் ஒரே நாளி்ல் 22 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டது. இவர்களில் மேலப்பாளையம், வள்ளியூர், ஏர்வாடி பகுதியைச் சேர்ந்தவர்களும் அடங்குவர். இதில் மேலப்பாளையத்தில்தான் அதிகமானவர்கள் என்று கூறப்படுகிறது.நாமக்கல் மாவட்டம் 18 பேருக்கு உறுதி செய்யப்பட்டது.

ஏற்கனேவே மதுரை அண்ணாநகரை சுற்றியுள்ள 5 கிலோ மீட்டர் பகுதி சுகாதாரத்துறை கட்டுப்பாட்டில் வந்துவிட்டது. அங்கு ஓவ்வொரு வீடாக அதிகாரிகள் சென்று ஆய்வு செய்து வருகிறார்கள். இந்த நிலையில் நெல்லை மேலப்பாளையம் தனிமைப்படுத்தப்பட்டுவிட்டது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.