May 14, 2024

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் மேலும் 33 பேருக்கு கொரோனா பாதிப்பு ; மொத்தம் 1629 ஆக உயர்வு

1 min read

33 more people affected by coronation- in Tamil Nadu Total rises to 1629

22-4-2020

தமிழகத்தில் நேற்று மேலும் 33 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1629 ஆக உயர்ந்த உள்ளது.

தமிழகத்தில் கொரோனா

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள்பரவி வருகிறது. ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தும் அதை கட்டுப்படுத்த முடியவில்லை.
தமிழகத்திலும் கொரோனா பரவி வருகிறது. நேற்று தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 33 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதில் சென்னையில் நேற்று மட்டும் 15 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனை அடுத்து தஞ்சையில் 5 பேருக்கும், மதுரையில் 4 பேருக்கும், திருவள்ளூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் தலா 2 பேருக்கும், காஞ்சீபுரம், திருச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்படது.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு உள்ளோரின் எண்ணிக்கை 1629 ஆக உயர்ந்து உள்ளது.

சென்னையில் நேற்று அதிகபட்சமாக 15 பேருக்கு கொரோனா கண்டு பிடிக்கப்பட்டதை அடுத்து சென்னை நகரில் மொத்தம் 373 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

மாவட்ட வாரியாக…

மாவட்ட வாரியாக நேற்று வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை வருமாறு:-
சென்னையில் 373, கோவை 134, திருப்பூர் 109, திண்டுக்கல் 77, ஈரோடு 70, நெல்லை 62, செங்கல்பட்டு 56, தஞ்சை 54, நாமக்கல் 51, திருச்சி 51, திருவள்ளூர் 51, திருச்சி 50, மதுரை 50, மேனி 43, கரூர் 42, நாகப்பட்டினம் 44, விழுப்புரம் 41, ராணிபேட்டை 39, தென்காசி 31, திருவாரூர் 28, தூத்துக்குடி 27, கடலூர் 26, சேலம் 24, வேலூர்22, விருதுநகர் 19, திருப்பத்தூர் 17, கன்னியாகுமரி 16, திருவண்ணாமலை 13, சிவகங்கை 12, ராமநாதபுரம் 11, காஞ்சீபுரம் 11, நீலகிரி 9, கள்ளக்குறிச்சி 6, பெரம்பலூர் 6, அரியலூர் 6,புதுக்கோட்டை1
மொத்தம் தமிழகத்தில் 1629 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.