சமையல் வீடியோ பதிவு செய்ய வேண்டாம்: நடிகைகளுக்கு குஷ்பு வேண்டுகோள்
1 min readசமையல் வீடியோ பதிவு செய்ய வேண்டாம்: நடிகைகளுக்கு குஷ்பு வேண்டுகோள்
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வரும் மே 3ம் தேதி வரை தேசிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் திரையுலகினர் தங்கள் வீடுகள் மற்றும் பண்ணைகளில் முடங்கி கிடக்கின்றனர்.
இவர்களில் சிலர் பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்த வீடியோக்கள், குறும்படங்கள், பாடல்கள் உருவாக்கி வெளியிட்டு வருகின்றனர்.
ஆனால், வேறு சில நடிகைகள், தங்கள் வீட்டில் சமைப்பதை வீடியோ மற்றும் போட்டோக்கள் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர். வித விதமான பண்டங்கள் சமைப்பதையும் வெளியிடுகிறார்கள்.
ஊரடங்கு வேளையில் பல்லாயிரம் பேர் ஒரு வேளை உணவு கூட இல்லாமல் பட்டினியால் தவிக்கும்போது, இதுபோன்ற பதிவுகள் தேவையா என்று பலதரப்பட்ட மக்கள் வேதனையுடன் கேட்கின்றனர்.
இதுகுறித்து நடிகை குஷ்பு தனது டிவிட்டர் பதிவில் கூறுகையில், “தாங்கள் சமைத்ததாக கவர்ச்சிகரமான உணவின் புகைப்படங்களை பலரும் பதிவிடுவதை பார்க்கிறேன். நாம் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். நம் வீட்டில் உணவு சமைக்கப்படுகிறது. இந்த கொடுமையான சூழலில், ஒரு வேளை உணவுக்கு பலரும் போராடிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு சிறிதளவான ஒத்துழைப்பையாவது வழங்குவோம். சாப்பிடுங்கள். ஆனால், அவற்றை காட்சிப்படுத்தாதீர்கள்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.