அமெரிக்காவில் ஒரே நாளில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 600 பேர் பலி
1 min read600 killed in one day in the United States
24/4/2020
அமெரிக்காவில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 600 பேர் இறந்துள்ளனர். இங்கிலாந்தில் 768 பேர் பலியாகி உள்ளார்கள்.
கொரோனா
சீனாவில் உற்பத்தியாகி எண்ணற்றோரை பலிவாங்கிய கொரோனா சுமார் 210 நாடுகளில் பரவி தனது கோர தாண்டவத்தை காட்டுகிறது. இந்த நோய்க்கு உலகிலேயே அமெரிக்காதான் அதிகமானோரை பறிகொடுத்து உள்ளது. அந்த நாட்டில் ஒரே நாளில் 600 பேர் இறந்துள்ளர். இதனால் அந்த நாட்டில் கொரோனாவல் இறந்தவர்களின் எண்ணிக்கை 50,836 ஆக உயர்ந்துள்ளது. அந்த நாட்டில் நேற்று 4,277 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அங்கு மொத்தம் 8 லட்சத்து 90 ஆயிரத்து 719 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இங்கிலாந்து
இங்கிலாந்து நாட்டில் கடந்த நேற்று மட்டும் 768 பேர் இறந்துள்ளனர். இதுவரை அந்த நாட்டில் இறந்தவர்களின் எண்ணிக்கை 19,506 பேர் ஆகும். இங்கிலாந்தில் நேற்று ஒரே நாளில் 5,386 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. மொத்தம் அந்த நாட்டில் மட்டும் 1 லட்சத்த 43 ஆயிரத்து 464 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
உலகம் முழுவதும் இதுவரை 27 லட்சத்து 63 ஆயிரத்து 61 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதவரை உலக அளவில் 1 லட்சத்து 93 ஆயிரத்து 664 பேர் இறந்துள்ளனர்.