டெல்லி உயிரியல் பூங்காவில் கொரோனாவால் புலி இறந்ததா?
1 min readDid Tiger die by Corona at Delhi Zoo?
24/4/2020
டெல்லி உயிரியல் பூங்காவில் புலி ஒன்று இறந்தது. அது கொரோனாவால் செத்ததா என்று பரிசோதனை செய்து வருகிறார்கள்.
கொரேனா
உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா என்ற கொடூர தொற்று முதலில் பறவைகள் அல்லது விலங்குகள் மூலம் வந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக வவ்வால் மூலம் வந்ததாக நம்பப்படுகிறது. எனவே எந்த பறவையோ விலங்கோ இறந்துவிட்டால் அது கொரோனாவால் செத்ததாக இருக்கலாமோ என்று பொதுமக்கள் அச்சம் கொள்கிறார்கள். இதனால் எந்த விலங்கு செத்தாலும் அதை பரிசோதனைக்கு உட்டுபடுத்துகிறார்கள்.
பிரான்ஸ் நாட்டில் உள்ள வன உயிரியல் பூங்காவில் கடந்த 5-ந் தேதி நாடியா என்ற 4 வயது பெண் புலி இறந்தது. இது கொரோனாவால் இறந்தது உறுதி செய்யப்பட்டது. அந்த புலியிடம் இருந்து மேலும் 4 புலிகளுக்கும் 3 சிங்கத்துக்கும் கொரோனா பரவியுள்ளது தெரியவந்துள்ளது.
டெல்லியில்…
இந்த நிலையில் டெல்லி உயிரியல் பூங்காவில் உள்ள ஒரு பெண் புலி நேற்று இறந்துவிட்டது. 14 வயதான அந்தப் புலி உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்ததாக கூறப்படுகிறது. ஆனாலும் அந்தப் புலி கொரோனா பாதிக்கப்பட்டு இறந்ததாக என்பதை கண்டறிய ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
—-