May 6, 2024

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் 64 பேருக்கு கொரோனா உறுதி

1 min read
Seithi Saral featured Image

Corona confirmed to 64 people in Tamil Nadu

26/4/2020

தமிழகத்தில் மேலும் 64 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

கொரோனா

தமிழகத்தில் தினமும் எத்தனை பேருக்கு கொரோன தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது என்பது அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) புதிதாக 64 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.  இதில் 39 பேர் ஆண்கள். 25 பேர் பெண்கள் ஆவர்.

 இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,885 ஆக உயர்ந்து உள்ளது.

இன்று கொரோனாவுக்கு ஒருவர் இறந்துள்ளார். இதனை அடுத்து தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களிண் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்து உள்ளது.

அதேநேரம் கொரோனா பாதிப்பில் இருந்து இன்று மட்டும் 60 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதுவரை மொத்தம் 1,020 பேர் குணம் அடைந்திருக்கிறார்கள்.

சென்னையில்…சென்னையில் மட்டும் இன்று 28 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் சென்னையில் மொத்தம் 523 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. மதுரையில் 15 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. அந்த மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 75 ஆக உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.