சலூனுக்குச் சென்ற 5 பேருக்கு கொரோனா
1 min read
Corona for 5 people who went to the saloon
மத்திய பிரதேசத்தில் கொரானோ பாதித்த நபர் சலூனுக்கு சென்றதால் புதிதாக 5 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் பர்கோவன் கிராமத்திலுள்ள சலூன் கடையில் முடிவெட்ட மற்றும் ஷேவிங் செய்வதற்காக சென்ற சிலருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அந்த சலூன் கடைக்கு சென்ற 12 பேரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்ததில் 6 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தூர் ஓட்டல் ஒன்றில் பணியாற்றிய வாலிபர் தனது சொந்த ஊரான பர்கோவனுக்கு சமீபத்தில் திரும்பியுள்ளார். அவர் ஏப்ரல் 5-ஆம் தேதி சலூனிற்கு முடிவெட்டச் சென்றுள்ளார். அதற்கடுத்த சில நாட்களில் நோய் தொற்றுக்கான அறிகுறிகள் தென்படவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
அவர் சென்ற இடங்களை விசாரித்ததில் சலூனுக்கு அன்றைய தினம் வந்த மேலும் 5 நபருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து 6 பேரும் சிகிச்சை பெற்று வருகினறனர். அவர்களது குடும்பத்தினர் வீடுகளில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர்.
சலூனில் அனைவருக்கும் ஒரே துண்டு மற்றும் கருவிகள் பயன்படுத்தப்பட்டுள்ளதே தொற்றுக்கு காரணம் என தெரிய வந்துள்ளது. அந்த சலூன் கடையில் இருந்த முடிதிருத்துநருக்கு தொற்று ஏற்படாதது குறிப்பிடத்தக்கது.