அழகுக்காக ஆப்பரேஷன் பண்ணும் நடிகை
1 min readதமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் மாறி மாறி நடித்தாலும் எங்கேயுமே தனக்கென ஒரு நிலையான பெயர் எடுத்துக் கொள்ளாமல் மாட்டிக் கொண்டவர் தான் பிரபல நடிகை.
ஆரம்பத்திலிருந்தே கவர்ச்சி கொஞ்சம் தூக்கலாக இருந்தால் அந்த நாயகியை கவர்ச்சி நாயகியாக ஒதுக்கிவிட்டனர். பெரிய அளவில் இவர் மீது எந்த ஈடுபாடும் இல்லாததால் நடிகர்களும் தங்களது படங்களில் நாயகியாக கமிட் செய்யவில்லை.
இதனால் எப்படியோ புதிய ஆட்களைப் பிடித்து தட்டுத்தடுமாறி ஹிந்திக்கு சென்றுவிட்டார். அங்கேயும் அம்மணியை முதல் படத்துடன் சரி, அதன்பிறகு ஏறெடுத்து பார்க்க ஆளில்லை. இருந்தாலும் அம்மணியின் காட்டில் பண மழை கொட்டுகிறதாம்.
பட வாய்ப்புகளே கிடையாது, இருந்தாலும் அம்மணிக்கு இவ்வளவு காசு எங்கிருந்து வருகிறது என உளவுத்துறை கண்காணிக்கும் போதுதான் தெரிய வந்ததாம் நடிகைக்கும் பலருக்கும் தொடர்பு இருப்பது. சினிமா பிரபலங்கள் மட்டுமில்லாமல் பல அரசியல்வாதிகளும் அம்மணியின் கைவசம் இருக்கிறார்களாம்.
உயரமாக இருந்த நடிகையை எப்போதுமே குதிரையுடன் தான் ஒப்பிட்டு பேசுவார்கள். அந்த அளவு தனது உடம்பை மெருகேற்றி வைத்திருப்பார். அது மட்டுமில்லாமல் பட வாய்ப்புகளுக்காக இட்லி துணியை மட்டும் கட்டிக் கொண்டு பீச்சில் எடுத்து அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறாராம்.
ஆனால் சமீபகாலமாக சோற்றுக்கே வழியில்லாத நிலைமையில் போல உடல் எடையை குறைத்து பார்ப்பதற்கே கேவலம் ஆகிவிட்டார். பத்தாததுக்கு அவரது மூக்கின் மேல் பலருக்கும் குறி.
தன்னுடைய மூக்கே தன்னுடைய வயதை எடுத்துக் காட்டி விடுகிறது என அடிக்கடி வெளிநாடு சென்று ஏதாவது ஒரு ஆபரேஷன் செய்து கொண்டிருக்கிறாராம். சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும் என்கிறார்கள் சினிமா வட்டாரத்தில்.