தமிழகத்தில் ஒரே நாளில் 508 பேருக்கு கொரோனா; பலி எண்ணிக்கை 33 ஆக உயர்வு
1 min read508 coroners in a single day in Tamil Nadu- Death toll rises to 33
5-5-2020
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 508 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியது.
அதிகரித்து வரும் கொரோனா
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா தமிழகத்திலும் பரவி வருகிறது. குறிப்பாக நேற்று முன்தினம் முதல் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிரடியாக உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் 500 ஐ தாண்டவிட்டது.
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள வியாபாரிகள், தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து அது விரைவாக பரவி வருகிறது.
நேற்று(திங்கட்கிழமை) தமிழகத்தில் 3,550 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருந்தது. இவர்களில் 1,409 பேர் குணமடைந்திருந்தனர்.
508 பேருக்கு…
இந்த நிலையில் தமிழகத்தில் இன்று ( செவ்வாய்க்கிழமை) ஒரே நாளில் 508 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் மாநிலம் முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 58 ஆக உயர்ந்துள்ளது.
இவர்களில் 1,485 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து வீடு திரும்பினர்.
33 பேர் சாவு
தமிழகத்தில் கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 31 பேர் வரை இறந்திருந்தனர். இந்த நிலைியல் இன்று மேலும் 2 பேர் இறந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில்…
தமிழகத்தில் இன்று 508 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் சென்னையில் மட்டும் இன்று 279 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை மாவட்ட வாரியாக வருமாறு:-
சென்னை – 279
கடலூர் – 68
கள்ளக்குறிச்சி – 38
செங்கல்பட்டு – 38
விழுப்புரம் – 25
தர்மபுரி – 1
திண்டுக்கல் – 7
நாமக்கல் – 15
நீலகிரி – 4
காஞ்சிபுரம் – 1
கிருஷ்ணகிரி – 2
மதுரை – 1
பெரம்பலூர் – 1
சேலம் – 1
தென்காசி – 1
தேனி – 5
திருவள்ளூர் – 18
திருநெல்வேலி – 1
திருச்சி – 1
விருதுநகர் – 1
மொத்தம் – 508