June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

ஓய்வு பெறும் வயது அதிகரித்தது சரியா?

1 min read

Is it OK to increase retirement age?

8-5-2020

தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 58 ல் இருந்து 59 ஆக உயர்த்தி உள்ளது. தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் அரசு சார்ந்த துறை ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்களின் ஓய்வு வயது 59 ஆக உணர்த்தப்பட்டு இருக்கிறது.
இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தமிழக அரசு அறிவித்து இருக்கிறது. இந்த மாதத்தில் இருந்து ஓய்வு பெறும் நிலையில் இருப்பவர்களுக்கு இது பொருந்தும். ஆனால் கடந்த மாதம் ஓய்வு பெற்றவர்களுக்கு இந்த உத்தரவு பொருந்தாது.
தமிழக அரசு இப்படி திடீரென்று ஏன் இதை அறிவித்தது என்று பலரும் ஆச்சரியத்தில் உள்ளனர். இந்த அறவிப்பு ஓய்வு பெறும் நிலையில் உள்ள அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.
ஆனால் பல்வேறு சங்கங்கள் இதை வரவேற்க வில்லை. இதனால் புதிய இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் வாய்ப்பு குறையும் என்று அவர்கள் கூறுகிறார்கள். மத்திய அரசு ஊழியர்களுக்கு ஓய்வு வயத 60 ஆக இருக்கும்போது மாநில அரசு ஊழியர்களுக்கும் ஓய்வு வயதை உயர்த்துவது தவறு அல்ல என்று சிலர் கூறுகிறார்கள்.
தற்போது ஓய்வு வயதை தமிழக அரசு அறிவித்ததற்கு இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது. அதாவது இப்போது தமிழக அரசு மிகுந்த பொருளாதார நெருக்கடியில் உள்ளது. இந்த நிலையில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்றால் அவர்களுக்கு பிராவிடண்ட் பண்ட் மற்றும் கிராஜியூட்டி பணத்தை வழங்க வேண்டும். பிராவிடண்ட் பணத்தை கொடுக்க வேண்டும்.
மாதந்தோறும் அரசு ஊழியர்களின் சம்பளத்தில் ஒரு பகுதியை பிராவிடண்ட் பண்டு கணக்கில் சேர்க்க வேண்டும். அதற்காக பிடிக்கப்பட்ட பணத்தை பிராவிடண்ட் பண்டு அலுவலத்திற்கு செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும்போது பாக்கி பணத்தை செலுத்தி விடுவார்கள். ஆனால் தற்போது அரசிடம் போதிய பணம் இல்லை என்பதால் அப்படி பணத்தை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டு இருப்பதாகவும் கூறப்படும்.
இதற்கான பணத்தோடு, கிராஜுயூட்டி கொடுக்கும் அளவுக்கும் தற்போது பணம் இருக்காது என்றும் கூறப்படுகிறது.
அதற்காக வயதை கூட்டுவது நல்லதல்ல என்று சிலர் கூறுகிறார்கள். இதை வேறு வழியில் சமாளித்து இருக்கலாம். தற்போது ஓய்வு பெறுபவர்களுக்கு பதிலான இளைஞர்கள் வேலைக்கு வந்தால் குறைந்த அளவுதான் சம்பளம் கொடுக்க வேண்டியது இருக்கும். அதுதான் அரசுக்கு லாபம் என்றும் சொல்கிறார்கள்.
இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க ஓய்வுபெறும் வயதை அதிகரிக்க கூடாது என்பது பலரது கருத்து.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.