June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

கொரோனாவுக்கு நமக்கு நாமே வேலி அமைப்போம்

1 min read

Let us set up a fence for Corona

8-5-2020

கொரோனா எப்படி உருவானது? யாரால் உருவானது என்ற ஆராய்ச்சி உலக அளவில் நடந்து கொண்டிருக்கட்டும். இப்போது நம்மை நாமே கொரோனாவில் இருந்து பாதுகாப்பதற்கான வழியை தேடவேண்டும்.
இந்தியாவுக்குள் நுழையாது… தமிழகத்திற்குள் தலைகாட்டது என்று மார்தட்டினோம். ஆனால் நம்மையும் ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறது கொரோனா.
கொரோனாவுக்காக பிறப்பிக்கபட்ட ஊரடங்கு நாளுக்குநாள் பலவீனம் அடைந்துவருகிறது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட முதல் 15 நாட்களில் கொரோனா மட்டுப்படுத்தப்பட்டு விடும் என்று நினைத்தோம். ஊரடங்கு மே 17-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தாலும் அதற்குள் அது இந்தியாவில் ஒழிக்கப்பட்டுவிடும் என்ற நம்பிக்கை இல்லை. உலக அளவில் இன்னும் இரண்டு ஆண்டுகள் அதன் தொற்று இருக்கத்தான் செய்யும் என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

மக்களின் வாழ்வாதாரம்

ஊரடங்கை தளர்த்தவில்லை என்றால் மக்களின் வாழ்வாதாரம் படுமோசமாக போய்விடும். வேலை இருந்தால்தான் சோறு கிடைக்கும் என்ற நிலை ஏற்பட்டுவிடும். அதனால் இந்த தளர்வு அவசியம்தான்.
அரசு தன்னுடைய பொருளாதார நிலையை ஸ்திரப்படுத்திக்கொள்ள மதுக்கடைகளை திறந்துள்ளது. இதனால் போலீசாரால் ஊரடங்கு கட்டுப்பாட்டை சரியாக வழிநடத்த முடியவில்லை.
கடுமையான கட்டுப்பாடு இருந்தபோதே கொரோனாவை ஒழிக்க முடியவில்லை. இனி எப்படி முழுமையாக கட்டுப்படுத்த முடியும் என்பதுதான் அனைவரின் கேள்வி.
எனவே ஒவ்வொருவரும் கொரோனா நம்மை அண்டாமல் பார்த்துக் கொள்வது ஒன்றுதான் அதிலிருந்து தப்பிக்க ஒரே வழி.

கொரோனா வீரியம்

கொரோனாவின் வீரியம் ஓரளவு குறைந்திருக்கும். காரணம் தற்போது பொதுமக்கள் பெரும்பாலோனோர் கொரோனா எதிர்ப்பு மருந்தாக சுக்கு, மிளகு, வெங்காயம், வெள்ளைப்பூண்டு போன்றவற்றை அதிகமாக பயன்படுத்த தொடங்கிவிட்டார்கள். மேலும் கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம், மற்றும் எதிர்ப்பு சக்தி மாத்திரைகளை சாப்பிட தொடங்கிவிட்டார்கள். இதனால் ஒருவரிடம் இருந்து பரவும் கொரோனா வைரசின் வீரியம் குறைந்து கொண்டேதான் வரும்.
எனவே நம்மை கொரோனா தொற்றினாலும் அதை எளிதில் முறியடித்துவிடலாம்.

நமக்கு நாமே…

அதே நேரம் நாம் நமக்குநாமே சில கட்டுப்பாடுகளை தொடர்ந்து கடைபிடிப்பது நல்லது.
ஒரே வீட்டில் உள்ளவர்கள் கூட சற்று விலகி இருப்பதே நல்லது. ஒவ்வொருவரும் அடிக்கடி கை, முகம் போன்றவற்றை கழுவிக்கொண்டே இருக்க வேண்டும்.
வெளியில் இருந்து காய்கனி என எந்தப் பொருளை வாங்கி வந்தாலும் அதை ஊப்பு, மஞ்சள் கலந்த தண்ணீரில் போட்டு எடுக்க பழகிக் கொள்ளுங்கள். பாக்கெட் பொருட்கள் என்றால் சோப்பு போட்டு கழுவதுகூட தவறு அல்ல.
ரூபாய் நோட்டுகளையும் சோப்பு போட்டு கழுவி காய வையுங்கள். அல்லது வெளியில் இருந்து வரும் பணத்தை தனி பையில் போட்டு அந்தப்பை தேவைப்படும் போது மட்டும் பயன்படுத்திவிட்டு மீண்டும் கையை கழுவுங்கள்.
சில மளிகை பொருட்களை வாங்கி இரண்டு தினங்கள் தொடாமல் வைத்துவிட்டு அதன்பின் பயன்படுத்துங்கள். வெயிலில் காய வைக்க வசதி இருந்தால் காய வைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.
மேலும் ஒவ்வொருவரும் ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் மூன்று முறை கல் உப்பு கரைசலில் வாயை கொப்பளியுங்கள்.
வெளிவே சென்று வந்தால் அணிந்துள்ள ஆடைகளை துவைத்து குளித்து கொள்ளுங்கள்.

கபசுர குடிநீரை 30 மில்லி வீதம் இரண்டு வேளை என 7 நாட்களுக்கு எடுத்துக் கொள்ளுங்கள்.
அதன்பின் நிலவேம்பு கசாயம் மூன்று நாட்களுக்கு எடுத்துக் கொள்ளுங்கள்.
இதுதவிர சின்ன வெங்காயத்தை வேக வைக்காமல் அப்படியே ஒன்றிரண்டு தினமும் தின்று வாருங்கள்.
சமையலில் வெள்ளைப்பூண்டை அதிகமாக பயன்படுத்துங்கள்.
தினமும் சிறிதளவு சீரகம், மிளகு மென்று சாப்பிடுங்கள்.
மிளகு ரசம் அடிக்கடி பயன்படுத்துங்கள்.
எலுமிச்சை பழ சாற்றை வெதுவெதுப்பா வென்னீரில் உப்பு போட்டு குடியுங்கள்.
நெல்லிக்காயை முடிந்தஅளவு பயன்படுத்துங்கள்.
இப்படி செய்வதால் நம் உடம்பில் எதிர்ப்பு சக்தி வந்துவிடும். நம்மையும் அறியாமல் கொரோனா நம்மை தொற்றிக்கொண்டால் அதில் இருந்து நாம் எளிதில் குணமாகிவிடலாம்.
அதேநேரம் நாம் மேலே சொன்ன கட்டுப்பாடுகளை கண்டிப்பாக கடைபிடியுங்கள். நம்முடைய உடல் உள்ளுறுப்பு பலவீனமாக இருந்தால் கொரோனா நம்மை பாடாய் படுத்திவிடும்.

உலக சுகாதார நிறுவத்தின் ஆய்வு

கொரோனா பற்றி உலக சுகாதார நிறுவனம் ஆய்வு செய்தது. 56,000 நோயாளிகளிடம் ஆய்வு செய்ததில் கிடைத்த தகவலை அது வெளியிட்டு உள்ளது. அவை வருமாறு:-

  • கொரோனா பாதிக்கப்பட்டோரில் 6 சதவீதம் பேரின் உடல்நிலை மோசமாக உள்ளது என்றும் அவர்களுக்கு நுரையீரல் பழுது, செப்டிக் ஷாக் (தொற்றிலிருந்து நம்மைக் காக்க நோய் எதிர்ப்பு சக்தி ரத்தத்தில் வெளியிடும் ரசாயனம் தவறாக நமக்கு ஆபத்தை உருவாக்கும் நிலை), உறுப்புகள் செயலிழப்பு மற்றும் இறப்பு ஏற்படும் ஆபத்து ஆகியவை தென்படுகிறது.
  • 14 சதவீதம் பேருக்கு தீவிர அறிகுறிகள் காணப்படுகின்றன. அவர்களுக்கு சுவாசிப்பதில் சிரமம் மற்றும் நுரையீரலுக்குள் சரியாக காற்று செல்லாமை உள்ளது.
  • 80 சதவீதம் பேருக்கு மிதமான அறிகுறிகள் தென்படுகின்றன. அவர்களுக்கு காய்ச்சல், இருமல் சிலருக்கு நிமோனியாவும் இருக்கலாம்.
    வயதானவர்கள், ஆஸ்துமா, நீரிழிவு மற்றும் இதய நோய்கள் உள்ளவர்கள் இதனால் அதிகம் பாதிக்கப்படலாம்.

இப்படி உலக சுகாதார நிறுவம் அறிவித்து உள்ளது.எனவே நம்மை நாமே காப்போம்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.