June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

கொரோனாவை பரவலை கட்டுப்படுத்த அதிகார பரவல் தேவையில்லை

1 min read


No power distribution is needed to control the corona

21-5-2020

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அதிகார பரவல் தேவையில்லை. பெரும்பாலான மாவட்டங்களில் கலெக்டர்கள் என்ற தனிநபர் அதிகாரத்தால்தான் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

கொரோனா

கொரோனா பரவல் தமிழகத்திலும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில்தான் அதிக அளவு கொரோன பரவல் உள்ளது. இதற்கு முக்கிய காரணம் மக்கள் நெருக்கடிதான். இதை யாராலும் மறுக்க முடியாது.
அதே நேரம் தமிழகத்தில் மற்ற மாவட்டங்களில் கொரோனா அதிசயிக்கும் வண்ணம் கட்டுப்படுத்தப்பட்டது. இதற்கு அந்தந்த மாவட்ட கலெக்டர்களின் நடவடிக்கைதான் காரணம்.
சென்னையைத் தவிர மற்ற மாவட்டங்களில் கலெக்டர் என்ற ஒரே அதிகாரியின் ஆணையில்தான் மாவட்டம் செயல்படும். எந்த ஒரு இடத்தில் கொரோனா தொற்று இருந்தாலும் அதிரடி நடவடிக்கை எடுத்து தனிமை படுத்த உத்தரவிட்டு விடுவார். மற்ற அதிகாரிகள் அதனை நிறைவேற்ற கடும்பாடு படுவார்கள்.
இந்த ஒருநபர் அதிகாரம்தான் மற்ற மாவட்டங்களில் கொரோனாவை வெகுவாக குறைந்தது. சில மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு முழுமையாக இல்லாமல் இருந்தது.

அதிகாரிகள்

ஆனால் சென்னையில் அப்படி கட்டுப்படுத்த முடியவில்லை. அதற்கு காரணம் ஜனத்தொகை மட்டும் அல்ல. ஒரு நபர் அதிகாரம் இல்லாததும் காரணம்தான்.
சென்னை நகரை பொறுத்தவரை மாநகராட்சி ஆணையாளர்தான் அதிகாரம் படைத்தவர். மாவட்ட கலெக்டருக்கு அவ்வளவு அதிகாரம் கிடையாது. இது தவிர இவர்களுக்கு மேலே உயர் அதிகாரிகள் பலர் உண்டு. போலீஸ் ஐ.ஜி., சுகாதாரத்துறை செயலாளர், உள்துறை செயலளர், தலைமைச் செயலாளர் என ஊயர் அதிகாரிகள் உள்ளனர். இதுதவிர அமைச்சர், முதல்-அமைச்சர் என அதிகார வட்டமும் உண்டு.
ஆளும் அதிகார வர்க்கங்கள் மக்களை அதிக கட்டுப்பாட்டுக்கு கொண்டு வர மாட்டார்கள். மேலும் கொரோனா தொடர்பான மேலிட உத்தரவு ஒன்று வருகிறது என்றால் அதை செயல்படுத்த பல அதிகாரிகள் உண்டு. அவர்களால் ஒருங்கிணைந்த முறையில் அதை நடைமுறைபடுத்த முடியாது.
உதாரணமாக சொல்ல வேண்டுமானால் பெரிய நகரான சென்னைக்கு ஓரேயொரு காய்கறி மார்க்கெட் கோயம்பேட்டில்தான் உள்ளது. அதை மூட வேண்டும் என்பது எல்லோரது மனதிலும் உதிக்கத்தான் செய்யும். ஆனால் அது உயர்மட்ட அதிகாரி மனதில் எப்படி வராமல் இருக்கும். ஆனால் அதிகார பரவல் காரணமாக அதை மூடாமல் விட்டுவிட்டார்கள். இதில் வியாபாரிகளின் கருத்தை கேட்டது பெரிய தவறு. அவர்களுக்கு கொரோனா பரவலை பற்றி எப்படி தெரியும்?
கோயம்பேடு மார்க்கெட்டை அப்போதே மூடி நகரின் பல்வேறு பகுதிகளில் மொத்த காய்கறி மார்க்கெட்டை அமைத்து இருக்க வேண்டும்,
அப்படித்தான் பிற மாவட்டங்களில் கலெக்டர்கள் செயல்பட்டார்கள்.
இந்த நிலையில் சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு சென்றவர்கள் மூலமும், வெளி மாநிலத்தில் இருந்து வந்தவர்கள் மூலமும் பிற மாவட்டங்களிலும் கொரோனா பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது அந்த மாவட்ட கலெக்டருக்கு பெரிய சவால்தான். அதோடு தற்போது மதுக்கடைகளை திறந்தாகிவிட்டது. அதற்கும்போலீஸ் பாதுகாப்பு போட வேண்டும். அப்படியானால் மாவட்ட எல்லையில் போலீசாரின் கண்காணிப்பு குறைய வாய்ப்பு உள்ளது. இப்படி பல்வேறு சவால்களை கலெக்டர்கள் சந்திக்க வேண்டியது இருக்கிறது. இதுதவிர ரெயில் போக்குவரத்து, பஸ் போக்குவரத்து தொடங்கப்பட்டால் அவர்களுக்கு மேலும் பிரச்சினைகள் வரத்தான் செய்யும். எனவே இனிதான் பொதுமக்களுக்கு அதிக கட்டுப்பாடுகள் தேவை.
பஸ் மற்றும் ரெயில் போக்குவரத்து தொடங்கப்பட்டால் அப்போதும் பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டு வர வேண்டும்.

இப்படி பல்வேறு கட்டுப்பாட்டுகளை கொண்டுவந்தாலும் அதை வெளிமாவட்ட கலெக்டர்கள் தீவிரமாக செயல்படுத்துவார்கள்.
அதேபோல் சென்னை நகரில் செயல்படுத்த முடியுமா என்பது சந்தேகமே.

சிறப்பு அதிகாரிகள்

இந்த நிலையில் கொரோனா தடுப்பு பணிக்காக சென்னையோடு ஐக்கியமாக இருக்கும் செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரிகளை தமிழக அரசு நியமனம் செய்துள்ளது.
அதன்படி செங்கல்பட்டு மாவட்டத்திற்கு சிறப்பு அதிகாரிகளாக உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ், அன்பு ஐ.பி.எஸ். ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்திற்கு பாஸ்கரன் ஐ.ஏ.எஸ்,, வனிதா ஐ.பி.எஸ். ஆகியோர் சிறப்பு அதிகாரிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு சுப்பிரமணியன் ஐ.ஏ.எஸ்., பவானீஸ்வரி ஐ.பி.எஸ் ஆகியோர் சிறப்பு அதிகாரிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை

இவர்களின் முழு கட்டுப்பாட்டில் அந்த மாவட்டங்கள் வந்தால் கொரோனாவை கட்டுப்படுத்தலாம்.
அதேபோல் சென்னை நகரிலும் ஒரு நபர் அதிகாரம் தேவை. அந்த அதிகாரி முழு பலத்துடன் செயல்படும் நல்லவராக இருக்க வேண்டும். அவருக்கு முதல்-அமைச்சர் மட்டுமே உத்தரவிட வேண்டும். மற்றகள் ஆலோசனையை வேண்டுமானால் தெரிவிக்க வேண்டும். கட்டளையிடக்கூடாது.
இப்படி நடந்தால் சென்னையிலும் விரையில் கொரோனா கட்டுக்குள் வரும்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.