டெலிவிஷன் தொடர் படப்பிடிப்புக்கு தமிழக அரசு அனுமதி
1 min read
Tamil Nadu government sanction for shooting of television series
21-5-2020
தமிழகத்தில் டெலிவிஷன் தொடருக்கான படப்பிடிபை நிபந்தனைகளுடன் நடத்த தமிழக அரசு அனுமதி அளித்து உள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் 19-ந் தேதி முதல் சினிமா மற்றும் டெலிவிஷன் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. சினிமா தியேட்டர்களும் மூடப்பட்டன. இதனால் புதிய படங்கள் வெளிவரவில்லை.
அதபோல் டெலிவிஷன் படப்பிடிப்பும் நடத்தாததால் டி.வி. தொடர்களை ஒளிபரப்பு முடியாமல் போனது. பல சேனல்களில் பழைய தொடர்களை மீண்டும் போடுகிறார்கள். இல்லை என்றால் சினிமா பாடல்களையும், பழைய நிகழ்ச்சிகளையும் காட்டுகிறார்கள்.
தற்போது ஊரடங்கு நீடித்தாலும் ஒரு சில தளர்வுகள் கொடுக்கப்பட்டு உள்ளன. அந்த வகையில் டெலிவிஷன் படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளிக்கக்கோரி அரசிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இதனை அடுத்து, டெலிவிஷன் படப்பிடிப்புகளை நிபந்தனைகளுடன் நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, படப்பிடிப்பில் பங்கேற்கும் நடிகர், நடிகைகள் தவிர தொழில்நுட்ப கலைஞர்கள் முக கவசம் அணிய வேண்டும். படப்பிடிப்பிற்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள், சாதனங்கள் கிருமி நாசினி மூலம் சுத்தப்படுத்த வேண்டும். தடை செய்யப்பட்ட பகுதி மற்றும் பொது இடங்களில் படப்பிடிப்பு நடத்தக் கூடாது. பார்வையாளர்களை கண்டிப்பாக அனுமதிக்க கூடாது என்பன உள்பட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.