May 3, 2024

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் ஒரே நாளில் 7,964 பேருக்கு கொரோன; மே.வங்காள மந்திரியும் பாதிப்பு

1 min read

7,964 in one day in India; West Bengal Minister also affected

30-5-2020
இந்தியாவில் ஒரே நாளில் 7,964 பேருக்கு கொரோன உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேற்கு வங்காள மந்திரிக்கும் கொரோன தொற்று ஏற்பட்டு உள்ளது.

7.964 பேருக்கு கொரோனா

இந்தியாவில் நாளுக்கு நாள்கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்திய அளவில் கொரோனா பாதிப்பு நிலவரம் பற்றி தினமும் காலையில் மத்திய சுகாதாரத்துறை அறவித்து வருகிறது.
இன்று(சனிக்கிழமை) காலை சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இன்று (சனிக்கிழமை) காலை 10 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 7,964 பேருக்கு தொற்று உறுதி செய்யப் பட்டு உள்ளது. இதனால் இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,65,799 ல் இருந்து 1,73,763 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவுக்கு 265 பேர் இறந்துள்ளனர். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 4,706 ல் இருந்து 4,971 ஆக அதிகரித்து உள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 71,106 ல் இருந்து 82,370 ஆக அதிகரித்துள்ளது. தற்போது கொரோனா பாதிப்புடன் ஆஸ்பத்திரியில் 86,422 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மந்திரிக்கு கொரோனா

மேற்கு வங்காள மாநிலத்தில் இதுவரை 4,813 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த மாநிலத்தில் 302 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர்.
இந்த நிலையில், அந்த மாநில மந்திரி ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரது பெயர் சுஜித் போஸ்.. இவர் மாநில தீயணைப்புத்துறை மந்திரியாக இருக்கிறார்.
இவரது வீட்டில் வேலை செய்யும் பெண், கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து, சுஜித் போஸ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொரோன பரிசோதனை செய்யப்பட்டது. அப்போதுதான் சுஜித் போசுக்கு கொரோன வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர், வீட்டிலேயே அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.