சிகிச்சைஅளித்த பெண் டாக்டரை காதலித்து மணந்த கொரோனா நோயாளி
1 min readCorCorona patient married woman doctor
30-5-2020
சிகிச்சை அளித்த டாக்டரையே காதலித்து திருமணம் செய்தார் ஒரு கொரோனா நோயாளி. இந்த சம்பவம் வலை தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
கொரோனா தந்த காதல்
சீனாவில் உருவாக கொரோனா உலகையே அச்சத்தில் மூழ்கடித்து உள்ளது. ஒவ்வொரு நாட்டிலும் பெரும் பொருளாதார சரிவை ஏற்படுத்தி இருக்கிறது. தனி மனிதர்களும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
அதேநேரம் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கு எத்தனையோ படிப்பினை ஏற்படுத்தி உள்ளது.
ஆஸ்பத்திரிக்கு கொரோனாவைத் தவிர மற்ற நோயாளிகள் அதிகமாக வரவில்லை. காற்று மாசு வெகுவாக குறைந்துள்ளது. விபத்து எண்ணிக்க குறைகிறது. நதிகளில் தண்ணீர் சுத்தமாக ஓடி கடலில் கலக்கிறது.
இப்படி சிற்சில நன்மைகள் கிடைத்துள்ளன. இங்கே கொரோனா ஒரு காதலை உருவாக்கி திருமணத்தில் முடிய வைத்திருக்கிறது. அதுபற்றிய விவரம் வருமாறு
டாக்டருடன் திருமணம்
எகிப்தில் முகமது பாமி என்பவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. உடனே அவர் அங்குள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கே அவருக்கு அழகான ஒரு பெண் டாக்டர் சிகிச்சை அளித்தார்.
அந்த டாக்டரின் அழகிலும் அனுசரணையான சிகிச்சையிலும் தன்னை பறிகொடுத்தார் முகமது பாமி . அந்த டாக்டரின் பெயர் ஆயிஷா என்றும் அவருக்கு இன்னும் திருமணம் ஆக வில்லை என்றும் அறிந்து கொண்டார். அவர் மீது காதல் கொண்டார். தனது காதலை டாக்டரிடம் தெரிவித்தார். டாக்டர் ஆயிஷாவும் அந்தக் காதலை ஏற்றுக் கொண்டார். இருவரும் ஒருவரையொருவர் தொடாமல் நெருங்காமல் காதலித்து வந்தனர். முகமது பாமி க்கு கொரோனா பூரணமாக குணம் ஆகும் வரை பொறுமையாக காத்திருந்தனர்.
நோய் குணமான பின்னர் அவர்கள் ஆஸ்பத்திரியிலேயே மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.