May 3, 2024

Seithi Saral

Tamil News Channel

கள்ளக்காதலனை கட்டிப்போட்டு இளம்பெண் கூட்டு பலாத்காரம்

1 min read
Teenagers are gang-raped

கள்ளக்காதலனை கட்டிப்போட்டு

இளம்பெண் கூட்டு பலாத்காரம்

30/5/2020

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் 24 வயது ஆணும், 23 வயது பெண்ணும் பணிபுரிகின்றனர். விராலிமலையை சேர்ந்த இருவருக்குமே திருமணமாகி விட்டது. இந்நிலையில் இருவருக்கும் காதல் மலர்ந்து கள்ளக்காதலாக மாறியது. கடந்த 25ம் தேதி இரவு பணி முடிந்து இருவரும் வீட்டுக்கு கிளம்பினர்.

நிறுவனத்துக்கு வெளியே அந்த பெண் நின்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த அந்த வாலிபர், அந்த பெண்ணை ஏற்றிக்கொண்டு, திருச்சி நோக்கி வந்தார். வழியில் மணிகண்டம் பகுதியில் சாலையோரம் பைக்கை நிறுத்தி விட்டு, இருட்டு பகுதியில் புதருக்குள் ஒதுங்கினர். பின்னர் சல்லாபத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, 3 வாலிபர்கள் பட்டா கத்திகளுடன் திடீரென அந்த இடத்துக்கு வந்தனர். அவர்களை பார்த்ததும் கள்ளக்காதலர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் 3 பேரும் அந்த வாலிபரை அடித்து, உதைத்து கை, கால்களை கட்டினர். 3 பேரில் ஒருவர் அந்த வாலிபரின் அருகில் நின்று பார்த்துக்கொள்ள மற்ற இருவரும் கத்தியை காட்டி மிரட்டி அந்த பெண்ணை மாறி மாறி பலாத்காரம் செய்தனர். என்னை விட்டு விடுங்கள் என்று அந்த பெண் கெஞ்சியும், அவர்கள் விடவில்லை. பின்னர் வாலிபருக்கு காவல் இருந்த 3வது நபரும் வந்து பலாத்காரம் செய்தார்.

பின்னர் அந்த பெண் அணிந்திருந்த இரண்டரை பவுன் எடையுடைய தோடு, செயின் மற்றும் வெள்ளிக்கொலுசு செல்போன், அந்த வாலிபரிடமிருந்து செல்போன், மணிபர்ஸ் ஆகியவற்றை பறித்துக்கொண்டு 3 பேரும் ஓடி விட்டனர். பின்னர் கள்ளக்காதலர்கள் இருவரும் விராலிமலை காவல் நிலையம் வந்து தனித்தனியாக புகார் அளித்தனர். பலாத்கார விவகாரம் வெளியில் தெரிந்தால் அவமானம் என்பதால், நகை, செல்போனை பறித்துச்சென்று விட்டதாக மட்டும் புகாரில் குறிப்பிட்டனர்.

சம்பவம் நடந்த இடம் மணிகண்டம் என்பதால் முதலில் இதை விராலிமலை போலீசார் விசாரிக்கவில்லை. பின்னர் எஸ்பி அருண் சக்திகுமார், உத்தரவுப்படி விராலிமலை போலீசார் கள்ளக்காதலர்கள் இருவரையும் அழைத்து விசாரித்தனர். அப்போது அந்த பெண் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார். சந்தேகமடைந்த போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில் நடந்த விவரங்களை கூறினர்.

இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் பெண்ணை பலாத்காரம் செய்து நகையை பறித்துச்சென்றது திருச்சி எடமலைப்பட்டிபுதூர் இந்திரா நகரை சேர்ந்த கிருஷ்ணன் மகன் முருகன்(22), சங்கர் மகன் நந்தகுமார்(20), வண்ணாங்கோவில் சடையாண்டி கோவில் தெரு தங்கராஜ் மகன் ஹெமராஜ்(28) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து விராலிமலை இன்ஸ்பெக்டர் மனோகரன் தலைமையிலான தனிப்படை போலீசார் 26ம் தேதி திருச்சி வந்து, மாநகர போலீசாரின் உதவியுடன் 3 பேரையும் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறுகையில், கூட்டாளிகளான 3 பேரும் நீண்ட நாட்களாக இந்த வேலையை செய்து வந்துள்ளனர். நெடுஞ்சாலைகளில் செல்லும் பெண்களை வழிமறித்து நகைகளை பறிப்பார்கள். மேலும் இரவு நேரத்தில் சாலை ஓரங்களில் டூவீலர், ஆட்டோ, கார் எதுவும் நிற்கிறதா என நோட்டமிடுவார்கள். அவ்வாறு இருந்தால், அந்த வாகனங்களில் வந்தவர்கள் மறைவாக இருக்கும் இடத்துக்கு சென்று அத்துமீறலில் ஈடுபடுவார்கள். குறிப்பாக காதலர்கள், கள்ளக்காதலர்களை குறிவைத்து உடன் வரும் ஆண்களை மிரட்டி, பெண்களை பலாத்காரம் செய்து நகை, பணத்தை பறித்துச்செல்வார்கள். பாதிக்கப்பட்டவர்கள் புகார் தராததால், இது வெளியில் தெரியாமல் இருந்துள்ளது. இப்போது 3 பேரும் சிக்கி விட்டனர் என்று கூறினர்.

இந்நிலையில் நகை, ெசல்போனை பறித்துச்சென்றதாக மட்டும் போலீசார் வழக்குப்திவு செய்து முருகன், சங்கர், ஹெமராஜ் ஆகிய 3 பேரையும் நேற்று திருச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தி, மத்திய சிறையில் அடைத்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.