பைலட்டுக்கு கொரோனா; பாதியில் இந்தியா திரும்பிய விமானம்
1 min read
pilot was affected for corono; The flight returned to India in half
30-5-2020
ரஷ்யாவில் உள்ள இந்தியர்களை திரும்ப அழைத்துவரச் சென்ற ஏர் இந்தியா விமானம் பைலட்டுக்கு கொரோனா என்பதால் பயணிகளை ஏற்றாமல் பாதியில் திரும்பி வந்தது.
ரஷ்யாவில் வாழும் இந்தியர்கள்
சீனாவில் உருவான கொரோன உலகையே ஸ்தம்பிக்க வைத்துள்ளது. வெளிநாட்டில் வாழும் ஒவ்வொருவரும் தங்கள் சொந்த நாட்டிற்கு செல்ல முடியாமல் தவித்து வருகிறார்கள்.
வெளிநாட்டில் வாழும் இந்தியர்களை திரும்ப அழைத்துவர மத்திய அரசு நடடிக்கை எடுத்தது. அதன்படி ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை அழைத்துவர ஏர் இந்தியா விமானம் அனுப்பப்பட்டது.
டெல்லியில் இருந்து கிளம்பிய அந்த விமானம் . உஸ்பெகிஸ்தான் விமானப்படை தளத்தில் தரை இறங்கியது.
அப்போது அந்த விமானத்தில் இருந்த பைலட் உள்பட பணியாளர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோனை செய்யப்பட்டது.
திரும்பியது
இந்த பரிசோதனையில் விமானத்தின் பைலட்களில் ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இது குறித்து தகவல் அறிந்த ஏர் இந்தியா நிர்வாகம், அந்த விமானத்தை உடனடியாக தாயகம் திரும்ப உத்தரவிட்டது.
இதனால், அந்த விமானம், அதில் இருந்து ஊழியர்களுடன் இன்று(சனிக்கிழமை) பகல் 12:30 டெல்லி திரும்பியது.
டெல்லி திரும்பியதும் விமான ஊழியர்கள் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர்.
பைலட்டுக்கு கொரோனா ஏற்பட்டதால் பாதியில் விமானம் திரும்பியதை அடுத்து அங்குள்ள இந்தியர்களை அழைத்து வர இன்னொரு விமானம் அனுப்பி வைக்கப்படும் என்று ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.