பெண்களின் படத்தை ஆபாசமாக சித்தரித்து பணம் கேட்டு மிரட்டல் -மாணவர் கைது
1 min readபெண்களின் படத்தை ஆபாசமாக
சித்தரித்து பணம் கேட்டு மிரட்டல்
30.5.2020
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே உலகநாதபுரத்தை சேர்ந்தவர் ரோகித் (19). கோவையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். பரமக்குடியை சேர்ந்த ஒருவர், தனது மனைவியின் புகைப்படத்தை ரோகித் என்பவர் ஆபாசமாக சித்தரித்து பணம் கேட்டு மிரட்டி வருவதாக எஸ்பி வருண்குமாரிடம் புகார் அளித்தார்.
இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்த எஸ்பி உத்தரவிட்டார். விசாரணையில், ரோகித் 4 போலியான பேஸ்புக் கணக்குகள் வைத்திருப்பது தெரியவந்தது. மேலும், பேஸ்புக்கில் பல பெண்களின் புகைப்படங்களை திருடி, அவற்றை ஆபாசமாக சித்தரித்து பணம் கேட்டு மிரட்டியதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பரமக்குடி நகர் போலீசார் வழக்குப்பதிந்து ரோகித்தை கைது செய்தனர். அவரது செல்போனை ஆய்வு செய்ததில் ஏராளமான ஆபாச வீடியோக்கள் இருந்தன. போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எஸ்பி வருண்குமார் கூறுகையில், ‘‘இதுபோன்ற சம்பவங்களால் ராமநாதபுரம் மாவட்டத்தில் யாராவது பாதிக்கப்பட்டிருந்தாலோ, சமூக வலைதளங்களில் முன்பின் தெரியாதவர்கள் அவதூறான குறுஞ்செய்திகள் அனுப்பி தொந்தரவு செய்தாலோ, எந்தவித தயக்கமும் அச்சமும் இன்றி 94899 19722 என்ற தொலைபேசி எண்ணில் என்னை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். தகவல் தருபவர்களின் ரகசியம் பாதுகாக்கப்படும்’’ என்று தெரிவித்தார்.