தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,940 பேருக்கு கொரோனா
1 min readIn Tamil Nadu 3.940 person affected for Corona today
28-6-2020
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,940 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் பரவி வரும் கொரோனா நிலவரம் பற்றி தமிழக சுகாதாரத்துறை தினமும் மாலையில் தவலை வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று வெளியிட்ட தகவல் வருமாறு:-
தமிழகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மட்டும் 3,940 பேருக்கு கொரோனா தொற்று இருப்பத கண்டறியப்பட்டது. இதனால் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 82,295 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் இன்று மட்டும் 1,443 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதனால் மொத்தம் 45,537 பேர் குணமடைந்துள்ளனர்.
54 பேர் சாவு
தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனாவுக்கு 54 பேர் இறந்துள்ளனர். இதில் 10 பேர் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் மற்றவர்களில் அரசு ஆஸ்பத்திரிகளிலும் சிகிச்சை பெற்றவர்கள்.
இவர்களையும் சேர்த்து கொரோனாவால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1079 ஆக அதிகரித்துள்ளது.
இன்று 32,948 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனால் மொத்த எண்ணிக்கை 11,10,402 ஆக அதிகரித்துள்ளது.
இன்று 31,505 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் இதுவரை 10,56,564 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.