இந்தியாவில் ஒரே நாளில் 19,459 பேருக்கு கொரோனா
1 min read19.459 person affected for corona in India one day
29-6-2020
இந்தியாவில் நேற்று ஒரே நாளில், 19 ஆயிரத்து, 459 பேருக்கு, கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 380 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர்.
19,459 பேருக்கு கொரோனா
இந்தியாவில் பரவி வரும் கொரோனா பற்றிய தகவலை மத்திய அரசின் சுகாதார அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று காலை வெளியிட்ட தகவல் வருமாறு:-
இந்தியாவல் இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் அதாவது நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரே நாளில் 19 ஆயிரத்து, 459 பேருக்கு, கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை எண்ணிக்கை, 5 லட்சத்து 48 ஆயிரத்து 318 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று ஒரே நாளில் 380 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர். இதனால் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 475 ஆகவும் அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிக்ககப்பட்டவர்களில் 2 லட்சத்து, 10 ஆயிரத்து 120 பேர் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 3 லட்சத்து, 21 ஆயிரத்து 723 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மேற்கண்ட தகவலை மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மாநில வாரியாக…
கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கையும் இறந்தவர்களின் எண்ணிக்கையும்(அடைப்புக்
குறிக்குள்) மாநிலம் வாரியாக வருமாறு:-
மராட்டியம் 1, 64, 626 ( 7,429)
டெல்லி 83,077 ( 2,623)
தமிழகம் 82,275 (1,079 )
குஜராத் 31,320(1, 808 )
உத்தரபிரதேசம் 22,147 ( 660)
மேற்கு வங்காளம் 17, 283 ( 639)
ராஜஸ்தான் 17, 271 (399)
தெலுங்கானா 14,419 ( 247)
அரியானா 13, 829 (223)
ஆந்திரா 13, 241 ( 169 )
கர்நாடகம் 13,190 ( 207)
மத்திய பிரதேசம் 13,186( 557)
பீகார் 9,212 ( 60)
அசாம் 7,206 ( 10 )
காஷ்மீர் 7,093 (94)
ஒடிசா 6,614 ((21)
பஞ்சாப் 5,216 ( 133)
கேரளா 4,189 (22)
உத்தரகாண்ட் 2.823 (38)
சத்தீஸ்கர் 2,662 ( 13 )
ஜார்கண்ட் 2 ,364 ( 12 )
திரிபுரா 1346 (1 )
கோவா 1,198 (3 )
மணிப்பூர் 1,185 (0)