May 8, 2024

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் ஒரே நாளில் 3,949 பேருக்கு கொரோனா

1 min read

3,949 person affected for corona in Tamil Nadu today

29-6-2020

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,949 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

3,949 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுபற்றிய தகவல்களை சுகாதாரத்துறை தினமும் மாலையில் வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-

தமிழகத்தில் இன்று (திங்கட்கிழமை) ஒரே நாளில் 3,949 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால்
பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 86,224 ஆக உயர்ந்துள்ளது.

இன்று கொரோனா கண்டறியப்பட்டுள்ள 3,949 பேரில், 3841 பேர் தமிழகத்தை சேர்ந்தவர். வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் 108 பேர்.

இன்று மட்டும் 30,039 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 11 லட்சத்து 40 ஆயிரத்து 441 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.

இன்று கொரோனா கண்டறியப்பட்டவர்களில், 2,379 பேர் ஆண்கள், 1,570 பேர் பெண்கள். மொத்தத்தில் கொரோனா பாதித்த ஆண்களின் எண்ணிக்கை 53,124 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 33,079 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 21 ஆகவும் உள்ளது.

குணம் அடைந்தவர்கள்

இன்று மட்டும் 2,212 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், குணம் அடைந்து வீடு திரும்பியவர்களின் மொத்த எண்ணிக்கை 47 ஆயிரத்து 749 ஆக உள்ளது.

கொரோனா பாதித்தவர்களில் 12 வயது வரை உள்ள சிறுவர், சிறுமிகள் என 4,225 பேர் ஆவர். 13 முதல் 60 வரை உள்ளவர்கள் 71 ஆயிரத்து 728 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 10 ஆயிரத்து 271 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

62 பேர் சாவு

கொரோனாவால் இன்று மட்டும் 62 பேர் இறந்தனர். அதில், 18 பேர் தனியார் ஆஸ்பத்திரியிலும், 44 பேர் அரசு ஆஸ்பத்திரிகளிலும் சிகிச்சை பெற்றவர்கள். இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் இதுவரை கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 1,141 ஆக உள்ளது. சென்னையில் மட்டும் இன்று 37 பேர் இறந்துள்ளனர். செங்கல்பட்டில் 7 பேரும், திருவள்ளூரில் 5 பேரும், மதுரையில் 4 பேரும், ராமநாதபுரத்தில் 2 பேரும், காஞ்சிபுரம், ஈரோடு, புதுக்கோட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விருதுநகர், திருநெல்வேலியில் தலா ஒருவரும் என 62 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

சென்னை

இன்று தமிழகத்தில் பாதிக்கப்பட்ட 3,949 பேரில் சென்னையில் மட்டும் 2,167 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் 55,969 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பிற மாவட்டங்களில் இன்று, மதுரையில் 303 பேருக்கும், செங்கல்பட்டில் 187 பேருக்கும், திருவள்ளூரில் 154 பேருக்கும், வேலூரில் 144 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

மதுரை

:மதுரையில் இன்று கொரோனா பாதிப்பு ஏற்பட்ட 303 பேரில் 13 பேர் பிற மாநிலங்களில் இருந்து திரும்பியவர்கள். மதுரை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2302 ஆக உயர்ந்துள்ளது.
சிகிச்சையில் இருந்த 40 வயதான இரு ஆண்கள், 67 வயதான முதியவர், அதே வயது மூதாட்டி சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தனர். இந்த மாவட்டத்தில் இதுவரை 29 பேரை கொரோனாவுக்கு இறந்துள்ளனர்.

நெல்லை- தென்காசி

நெல்லை மாவட்டத்தில் இன்று மட்டும் 7 பேருக்கு கொரோ உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 751 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது.
இதில் வெளியிடங்களில் இருந்து வந்தவர்கள் 333 பேர்.
தென்காசி மாவட்டத்தில் இன்று 4 பேருக்கு புதிதாக கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் இந்த மாவட்டத்தில் கொரோனா பாதிப்பின் மொத்த எண்ணிக்கை 335 ஆக உயர்ந்து உள்ளது. இவர்கிளல் வெளியில் இருந்து வந்தவர்கள் 35 பேர்.

தூத்துக்குடி மாவட்டத்தி்ல் இன்று மட்டும் கொரோனாவல் 37 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுஉள்ளளது.

மொத்தம் 903 வெளியிடங்களில் இருந்து 93

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.