உயரமான நடிகருடன் வில்லங்கமான நட்பில் பிரபல நடிகை
1 min readதமிழ் சினிமாவில் உயரமான நடிகராக வலம் வருபவர் தான் அந்த பிரபல நடிகர். ஒரு சில காலங்களுக்கு முன் தமிழ் சினிமாவே தன்னுடைய கையில் தான் இருக்கிறது என்பதை போல ஆட்டம் ஆடினார்.
அப்போதுதான் அந்த நாயகி இவரை கைக்குள் போட்டுக் கொண்டால் பட வாய்ப்புகள் நிறைய கிடைக்கும் என கேப்பில் நட்பு வளர்த்து கொண்டாராம். அந்த நாயகி அப்போது தான் சினிமாவுக்கு வந்த புதிது.
அந்த நாயகியின் அக்காவும் சினிமா வாய்ப்புக்காக தடுமாறிக் கொண்டிருக்கிறார். தற்போது டிவி நிகழ்ச்சியில் காமெடியனாக வலம் வரும் ஒருவருடன் ஹீரோயினாக ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
பெங்களூருவைச் சேர்ந்த அந்த நாயகியை நடிகருடன் நட்பை மேம்படுத்திக்கொள்ள சென்னையில் ஒரு ஃப்ளாட்டில் தங்கி வந்துள்ளார். அடிக்கடி அந்த நடிகருடன் பார்ட்டிக்கு செல்வது, வெளியில் செல்வது என பொழுதைக் கழித்து வந்துள்ளார்.
ஏற்கனவே அந்த நடிகருக்கு வாரிசு நடிகை ஒருவரின் மீது காதலில் இருந்து தோல்வியை தழுவியது. அதன் பிறகு நடக்க இருந்த திருமணமும் தடுமாறியது. தற்போது இந்த நடிகையுடன் குஜாலாக இருந்து வருகிறாராம்.
முதலில் எதார்த்தமாக எடுத்துக் கொண்ட அவரது தாயாருக்கு விஷயம் எப்படியோ தெரிந்துவிட்டது. அந்த மோசமான ஆளுடன் சேர்ந்து கொண்டு பெயரை கெடுத்துக் கொள்ளாதே என கண்டபடி டோஸ் விட்டுள்ளாராம்.
பட வாய்ப்பு தருவார் என நம்பி நம்பி ஏமாந்து அந்தநாயகி தற்போது மீண்டும் தனது சொந்த ஊருக்கே பொட்டியை கட்டி விட்டாராம். இப்படித்தான் மலையாள நாயகி ஒருவருடன் பழகி சினிமாவை விட்டே துரத்தி விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.